பகவத் கீதை என் இன்றைய பார்வையிலே --
படிப்பதற்கு செல்ல வேண்டிய முகவரி --
http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=825
-- -- அன்பே சிவம் - பத்மஜா
Friday, February 15, 2008
கீதை - பத்மஜா - ஐந்து
O God! Rise aloft the banner of the oneness of mankind.
O God! Establish the Most Great Peace.
Cement Thou, O God, the hearts together.
- Abdu’l-Baha
...............
நம் புராணகளிலாகட்டும், உபநிஷத்துகளிலாகட்டும், மற்றைய நூல்களிலாகட்டும் உயர்ந்த ஆத்ம ஞானத்தை கேள்வி-பதில் மூலமே விளக்கியுள்ளனர். சீடனானவன் ஆசானிடம் பணிவுடன் கேள்வி கேட்க, குருவோ மனமகிழ்ந்து பதிலுரைப்பார்.
Where there is demand, there is supply என்பதைப் போல கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறுவார். தானாக வலிய வந்து ‘இந்தா, இவையெல்லாம் எனக்கு தெரியும். நீயும் கற்றுக் கொள்,’ என்று சீடன்பால் திணிப்பதில்லை.
முதலில் சீடன் கேள்வி கேட்கும் அளவு உயரிய நிலையை அடைய வேண்டும். கிடைத்த பதிலை கிரஹித்துக் கொண்டு அதிலிருந்து மேலும் தெளிவு பெற மேலும் கேள்விகள் கேட்க வேண்டும். இதில் இலக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். விவேகசூடாமணியில் மிக அழகாக ஆதிசங்கரகரர் இம்முறையை கையாண்டிருப்பார். ஆகவே கேள்விகள் மிக அவசியம். கேள்வி அறிவை விசாலமாக்கும். கேள்வி பதிலை செம்மைப்படுத்தும். கேள்வி இலக்கை அடையும் வரை அமைதியின்றி தவிக்கும்.
இருதரப்பு மக்கள் கேள்விகளை கேட்பதில்லை. ஒருவன் அஞ்ஞானி. மற்றொருவன் மெய்ஞானி. அஞ்ஞானிக்கோ ஒன்றும் தெரியாததனால் கேள்விகள் அவன் மூளையில் உதிப்பதில்லை. மெய்ஞானியோ, அனைத்தும் அறிந்தவர். கடவுளுக்கு சமமானவர். அவருக்கு அவசியமில்லை.
அதற்காக தேவையற்ற கேள்விகளை கேட்பவர், விடைகளைப் பற்றிய கவலையின்றி கேள்விகளை கேட்க வேண்டுமே என்று வீணே தவிப்பவர், கேள்விகளைக் கேட்டு பிறரை மடக்க வேண்டும் என்று இறுமாப்புடையவர், கேள்விக்கான விடை ஒன்றை முதலிலேயே மனதில் வரையறுத்துக் கொண்டு பிறகு கேள்விகளை கேட்பவர், கேள்விக் கேட்பவர் மட்டுமே புத்திசாலிகள் என்னும் தவறான எண்ணத்துடன் பிறர் அறிய கர்வத்துடன் இருப்பவர் – இவர்கள் அஞ்ஞானியை விட பரிதாபத்திற்குரியவர்கள்.
நானே பலமுறைப் பார்த்திருக்கிறேன். யார் குருமார்கள் வந்தாலும், யார் சொற்பொழிவாற்றினாலும் அவரை அணுகி கேள்விகள் கேட்பர் ஒரு சிலர். எனக்கோ ஒரு கேள்வியும் மனதில் எழவே எழாது. நான்தான் அஞ்ஞானியாயிற்றே. நல்லதாக போயிற்று.
ஞானி ஆக வேண்டுமெனில் வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடிக்க வேண்டிய அவசியமில்லை.
காந்திஜியைப் போல எடுத்த கொள்கை ஒன்றாக இருந்தாலும், அதை இறுதி வரை கடைபிடிக்கும் மனப்பக்குவமும், உறுதியும் வேண்டும். இது முதலும் கடைசியுமாய் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
உதாரணத்திற்கு இந்த கீதையை மனப்பாடம் செய்து என்ன பயன்? வேண்டுமானால் என் கட்டுரைகளிலோ சொற்பொழிவிலோ பிறரைக் கவரும் வண்ணம் அழகாக கீதையை மேற்கோள் காட்டலாம். அவற்றை பின்பற்றவில்லையெனில்....
நான் ரசித்துப் படித்த சுவாமி விவேகானந்தரின் வரிகள் இதோ.....
“Knowledge can only be got in one way, the way of experience; there is no other way to know.”
இதை எழுதும் பொழுது பல வருடங்களுக்கு முன் படித்த இந்நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது –
ஏழை பக்தர் ஒருவர் கோவில் வாசலில் அமர்ந்து பகவத் கீதையைப் பார்த்து பார்த்துக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாராம். அதைப் பார்த்த சைதன்ய மகாபிரபு அவரருகே சென்று ‘ஏன்’ என்று கனிவுடன் வினவ, அதற்கு பக்தர், ‘என்னால் மேலே பக்கத்தை புரட்ட கூட முடியவில்லை. கண்ணனோ பரமாத்மா. ஆனால் அவரோ அர்ச்சுனனின் ஆணைக்கு அடிபணியும் தேரோட்டியாகி மாறி நிற்கின்றார் எவ்வித அகந்தையுமின்றி. இதைப் பார்த்து பார்த்து என் நெஞ்சம் உருகுகிறது,’ என்றாராம். அதற்கு சைதன்யர், கண்ணீருடன் பக்தரை ஆரத்தழுவிக் கொண்டு, ‘நீர் மேலே படிக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி கற்க வேண்டியது வேறொன்றுமில்லை,’ என்றாராம்.
இனி கேள்வி-பதிலுக்கு வருவோம்.
பார்த்தனுடன் தோளோடு தோள் சேர்த்து, கையோடு கைக்கோர்த்து நடக்கும் கண்ணன் இதற்கு முன் ஒரு முறை கூட தானாக சென்று ‘வா, நீ என் உயிர் தோழன். உனக்கு இதைக் கற்பிக்கிறேன்,’ என்று கூறியதில்லை. எதை எப்பொழுது கூற வேண்டுமோ அதை மட்டுமே அவர் கூறுகிறார். இதையாவது நம் வாழ்வில் கடைப்பிடிக்க முயல வேண்டும்.
அதே போல், ஒரு முறை கூட கண்ணன் பார்த்தனைப் பார்த்து, ‘உனக்கு இது கூட தெரியாதா, சுத்த மக்காக இருக்கிறாயே’ என்று எகத்தாளமாகவோ, ‘ஏன் இப்படி கேள்விக் கேட்டு உயிரை வாங்குகிறாய்,’ என்றோ கடிந்து கொள்வதில்லை. பொறுமையாக ஒவ்வொரு முறையும், ‘இவற்றை நன்கு மனதில் வாங்கிக் கொண்டாயா எனதருமை நண்பனே,’ என்றே கனிவுடன் கூறுகிறார்.
இப்படிப்பட்ட குருவே ஆத்ம ஞானத்தை தேடும் ஒருவனுக்கு அவசியம்.
கீதையில் பரமாத்மாவான கண்ணன் குருவாக நிற்க, பார்த்தன் சீடனாக மாறி பணிவுடன் ஆத்ம ஞானத்தைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்கிறான்.
இதைப் படிக்கும் நான் சிறிது நேரத்திற்கு அர்ச்சுனனாக மாறி கண்ணனிடம் கேட்கிறேன்...
ஞானமென்று உரைத்தாய் என் அஞ்ஞானம் மறையவே
யோகமென்று உரைத்தாய் அன்றாட வாழ்வை நடத்தவே
உத்தமமென்று உரைப்பதை நன்றே தெளியவை உயரவே
பித்தான எனக்கு மேலும் புகட்டுவாய் அறிவையே
கண்ணன் சொன்னான் -
செய்யும் செயல்களைவிட சிறந்தது புத்தி யோகமே
பலன்களில் நாட்டமுடையோர் விரும்புவது போகமே
எனவே சரணடைவாய் புத்தியில் என்ற கூற்றை ஏற்குமுன்
ஏனென்று சிறிது கேட்பாய் என் நண்பனே
நன்மை தீமையை கண்டறியும் திறன்
புத்திக்கு உண்டென்பதை அறிவாயல்லவா
சமநோக்கு பார்வை புத்தியால் அடைவதால்
செயல்களின் நல்லவையும் தீயவையும் அழியுமல்லவா
திறம்பட செய்யப்படும் செயல்களே யோகமாகும்
புத்திசாலிகள் தீயவை களைவது இவ்வழியே ஆகும்
பலன்களில் நாட்டமின்றியே அவர்தம் செயல்களும் சிறக்கும்
பிறப்பின் சுழற்சியிலிருந்து விடுபடுவதும் உறுதியாகும்
புத்தியைக் கொண்டு மோகத்தை களைவதனால்
கேட்டு உணர்ந்ததுவும் இனி கேட்டு உணரப்படுவதும்
சுருதி குறைந்து சுயநினைவிழந்து விடுவதால்
நடுநிலை என்றும் கொள்வாய் என் நண்பனே
எப்பொழுது உன் புத்தி கேட்டு உணர்ந்தவைகளை
புறக்கணித்து அசைவற்று சலனமற்று இருக்கிறதோ
எப்பொழுது ஆன்மாவில் நிலைத்து இருக்கிறதோ
அப்பொழுது ஆத்ம ஞானத்தை உணர்வாய் தோழனே
நான் கேட்டேன் –
இறையருளில் திளைத்து ஒன்றான மனிதனை
ஸ்தித பிரஞையுடன் வாழும் மனிதனை
இவ்வுலகில் அடையாளம் காண்பது எங்ஙனம்
அவர் பேசுவதும் அமர்வதும் நடப்பதும் எங்ஙனம்
கண்ணன் சொன்னான் –
ஆசைகளை அறவே விட்டொழித்திருப்பார்
மனதை தம்வசம் வைத்திருப்பார்
ஆன்மாவில் ஒன்றியே மகிழ்ந்திருப்பார்
சமநிலையடைந்த மனிதன் அவரேயாவார்
யாருடைய மனம் எந்நிலையிலும் கலங்கவில்லையோ
யார் செழிப்பிலும் போகத்தில் திளைக்கவில்லையோ
யார் பந்தம், பயம் மற்றும் கோபம் இவற்றின் பிடியில் சிக்கவில்லையோ
சந்தேகமின்றி அவரே ஞானி என்பதை தெரிந்து கொள்
அனைத்து திசைகளிலும் கால்களை உள்ளித்துக்கொள்ளும் ஆமையைப் போல்
புலன்களில் இருந்து தன் உணர்வுகளை இழுத்துக் கொள்வாரே
புலன்களும் அவரிடம் நெருங்க முடியாமல் தவிப்புடன் நிற்க
இறைவனைக் கண்ட அக்கணங்களில் அத்தவிப்பும் மறைந்திடுமே
நான் கேட்டேன் –
நீ கூறுவதை கேட்பதற்கு எளிதாய் இருக்கிறதே
எவரும் புத்தியை வெல்ல முடியும் என்றே தோன்றுகிறதே
சமநிலை அடைவது கடினமல்ல போல் தெரிகிறதே
நானே இலக்கு என்பது இப்பொழுது புரிகிறதே
கண்ணன் நகைத்துவிட்டு பிறகு கனிவுடன் சொன்னான் –
எளிதில் அடைவதல்ல நான் கூறியவை
புத்திசாலிகளையே புலன்கள் நன்கு ஏமாற்றுபவை
மனதை சூறாவளியாய் ஆக்கும் ஆற்றலுடையவை
முயற்சிகள் பல செய்தாலும் கலங்காதவை
நான் கேட்டேன் -
பிறகு எப்படி இருக்க வேண்டும் என்கிறாய் கேசவா
கண்ணன் தொடர்ந்தான் -
கண்கட்டும் புலன்களின் ஜாலங்களில் சிக்காமல்
அவற்றை அடக்கி ஒடுக்கி அமைதியாய்
புத்தி நிலைத்து அசையாது அமர்ந்திருக்க வேண்டும்
என்னை மட்டும் நினைத்திருக்க வேண்டும்
வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்த நான், செயலிழந்து அமர்ந்திருந்தேன். அப்பொழுதுதான் உணர்ந்தேன் ‘என்னை’ என்ற அவன் கூற்றினை?
ஓ............. இங்கு கண்ணன் உயிரும் உடலும், சதையும் அறிவை மயக்கும் அழகும் உள்ள கண்ணனாக இல்லாமல், கேலிப் பேசி சிரித்து மகிழும் கிருஷ்ணனாக இல்லாமல், எங்கும் நிறைந்த உருவும் அருவும் இல்லாத அந்த பரம்பொருளாய் அல்லவா சொல்கிறான்?
ஆனால் அவன் கூறுவது நடக்கக் கூடிய காரியமா என்ன? மனம் தொய்ந்தது.
இதோ ஒரு வருடத்திற்கு முன் நான் எழுதி வைத்த ஆங்கிலக் கவிதையை எடுத்துப் படிக்கிறேன்......
Beauty invites special compliments
I crave not to have one
Wealth cheers cruel attitudes
I need not retain one
Power rules ravening fowls
I grab not to enjoy one
Education shelters intellectual pleasures
I dream not to master one
Hatred guarantees feudal enemities
I desire not to possess one
Anger ignites mental imbalances
I like not to identify one
Jealousy cooks ugly delicacies
I yearn not to taste one
Selfishness adorns human minds
I strive not to buy one
Patience befriends many virtues
I dare not to lose one
Giving destroys grumbling greediness
I long to be blessed with one
Love transcends all boundaries
I pray only for such a one
இனி வரும் நாட்களில் கற்றுக் கொள்ளப் போகிறேனோ இல்லையோ, என் மனம் இக்கவிதையில் லயித்து இறுதி வரிகளில் நிலைக்கிறது.
Love transcends all boundaries
I pray only for such a one
இதுவே என் இன்றைய பிரார்த்தனையும்.
வரும் நாட்களிலாவது இந்த அஞ்ஞானிக்கு ஏதாவது புரியுமா என்ற சிந்தனையுடனே கீதையை வணங்கி மூடி வைக்கிறேன்....
-- அன்பே சிவம் - பத்மஜா
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=30
O God! Establish the Most Great Peace.
Cement Thou, O God, the hearts together.
- Abdu’l-Baha
...............
நம் புராணகளிலாகட்டும், உபநிஷத்துகளிலாகட்டும், மற்றைய நூல்களிலாகட்டும் உயர்ந்த ஆத்ம ஞானத்தை கேள்வி-பதில் மூலமே விளக்கியுள்ளனர். சீடனானவன் ஆசானிடம் பணிவுடன் கேள்வி கேட்க, குருவோ மனமகிழ்ந்து பதிலுரைப்பார்.
Where there is demand, there is supply என்பதைப் போல கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறுவார். தானாக வலிய வந்து ‘இந்தா, இவையெல்லாம் எனக்கு தெரியும். நீயும் கற்றுக் கொள்,’ என்று சீடன்பால் திணிப்பதில்லை.
முதலில் சீடன் கேள்வி கேட்கும் அளவு உயரிய நிலையை அடைய வேண்டும். கிடைத்த பதிலை கிரஹித்துக் கொண்டு அதிலிருந்து மேலும் தெளிவு பெற மேலும் கேள்விகள் கேட்க வேண்டும். இதில் இலக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். விவேகசூடாமணியில் மிக அழகாக ஆதிசங்கரகரர் இம்முறையை கையாண்டிருப்பார். ஆகவே கேள்விகள் மிக அவசியம். கேள்வி அறிவை விசாலமாக்கும். கேள்வி பதிலை செம்மைப்படுத்தும். கேள்வி இலக்கை அடையும் வரை அமைதியின்றி தவிக்கும்.
இருதரப்பு மக்கள் கேள்விகளை கேட்பதில்லை. ஒருவன் அஞ்ஞானி. மற்றொருவன் மெய்ஞானி. அஞ்ஞானிக்கோ ஒன்றும் தெரியாததனால் கேள்விகள் அவன் மூளையில் உதிப்பதில்லை. மெய்ஞானியோ, அனைத்தும் அறிந்தவர். கடவுளுக்கு சமமானவர். அவருக்கு அவசியமில்லை.
அதற்காக தேவையற்ற கேள்விகளை கேட்பவர், விடைகளைப் பற்றிய கவலையின்றி கேள்விகளை கேட்க வேண்டுமே என்று வீணே தவிப்பவர், கேள்விகளைக் கேட்டு பிறரை மடக்க வேண்டும் என்று இறுமாப்புடையவர், கேள்விக்கான விடை ஒன்றை முதலிலேயே மனதில் வரையறுத்துக் கொண்டு பிறகு கேள்விகளை கேட்பவர், கேள்விக் கேட்பவர் மட்டுமே புத்திசாலிகள் என்னும் தவறான எண்ணத்துடன் பிறர் அறிய கர்வத்துடன் இருப்பவர் – இவர்கள் அஞ்ஞானியை விட பரிதாபத்திற்குரியவர்கள்.
நானே பலமுறைப் பார்த்திருக்கிறேன். யார் குருமார்கள் வந்தாலும், யார் சொற்பொழிவாற்றினாலும் அவரை அணுகி கேள்விகள் கேட்பர் ஒரு சிலர். எனக்கோ ஒரு கேள்வியும் மனதில் எழவே எழாது. நான்தான் அஞ்ஞானியாயிற்றே. நல்லதாக போயிற்று.
ஞானி ஆக வேண்டுமெனில் வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடிக்க வேண்டிய அவசியமில்லை.
காந்திஜியைப் போல எடுத்த கொள்கை ஒன்றாக இருந்தாலும், அதை இறுதி வரை கடைபிடிக்கும் மனப்பக்குவமும், உறுதியும் வேண்டும். இது முதலும் கடைசியுமாய் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
உதாரணத்திற்கு இந்த கீதையை மனப்பாடம் செய்து என்ன பயன்? வேண்டுமானால் என் கட்டுரைகளிலோ சொற்பொழிவிலோ பிறரைக் கவரும் வண்ணம் அழகாக கீதையை மேற்கோள் காட்டலாம். அவற்றை பின்பற்றவில்லையெனில்....
நான் ரசித்துப் படித்த சுவாமி விவேகானந்தரின் வரிகள் இதோ.....
“Knowledge can only be got in one way, the way of experience; there is no other way to know.”
இதை எழுதும் பொழுது பல வருடங்களுக்கு முன் படித்த இந்நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது –
ஏழை பக்தர் ஒருவர் கோவில் வாசலில் அமர்ந்து பகவத் கீதையைப் பார்த்து பார்த்துக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாராம். அதைப் பார்த்த சைதன்ய மகாபிரபு அவரருகே சென்று ‘ஏன்’ என்று கனிவுடன் வினவ, அதற்கு பக்தர், ‘என்னால் மேலே பக்கத்தை புரட்ட கூட முடியவில்லை. கண்ணனோ பரமாத்மா. ஆனால் அவரோ அர்ச்சுனனின் ஆணைக்கு அடிபணியும் தேரோட்டியாகி மாறி நிற்கின்றார் எவ்வித அகந்தையுமின்றி. இதைப் பார்த்து பார்த்து என் நெஞ்சம் உருகுகிறது,’ என்றாராம். அதற்கு சைதன்யர், கண்ணீருடன் பக்தரை ஆரத்தழுவிக் கொண்டு, ‘நீர் மேலே படிக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி கற்க வேண்டியது வேறொன்றுமில்லை,’ என்றாராம்.
இனி கேள்வி-பதிலுக்கு வருவோம்.
பார்த்தனுடன் தோளோடு தோள் சேர்த்து, கையோடு கைக்கோர்த்து நடக்கும் கண்ணன் இதற்கு முன் ஒரு முறை கூட தானாக சென்று ‘வா, நீ என் உயிர் தோழன். உனக்கு இதைக் கற்பிக்கிறேன்,’ என்று கூறியதில்லை. எதை எப்பொழுது கூற வேண்டுமோ அதை மட்டுமே அவர் கூறுகிறார். இதையாவது நம் வாழ்வில் கடைப்பிடிக்க முயல வேண்டும்.
அதே போல், ஒரு முறை கூட கண்ணன் பார்த்தனைப் பார்த்து, ‘உனக்கு இது கூட தெரியாதா, சுத்த மக்காக இருக்கிறாயே’ என்று எகத்தாளமாகவோ, ‘ஏன் இப்படி கேள்விக் கேட்டு உயிரை வாங்குகிறாய்,’ என்றோ கடிந்து கொள்வதில்லை. பொறுமையாக ஒவ்வொரு முறையும், ‘இவற்றை நன்கு மனதில் வாங்கிக் கொண்டாயா எனதருமை நண்பனே,’ என்றே கனிவுடன் கூறுகிறார்.
இப்படிப்பட்ட குருவே ஆத்ம ஞானத்தை தேடும் ஒருவனுக்கு அவசியம்.
கீதையில் பரமாத்மாவான கண்ணன் குருவாக நிற்க, பார்த்தன் சீடனாக மாறி பணிவுடன் ஆத்ம ஞானத்தைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்கிறான்.
இதைப் படிக்கும் நான் சிறிது நேரத்திற்கு அர்ச்சுனனாக மாறி கண்ணனிடம் கேட்கிறேன்...
ஞானமென்று உரைத்தாய் என் அஞ்ஞானம் மறையவே
யோகமென்று உரைத்தாய் அன்றாட வாழ்வை நடத்தவே
உத்தமமென்று உரைப்பதை நன்றே தெளியவை உயரவே
பித்தான எனக்கு மேலும் புகட்டுவாய் அறிவையே
கண்ணன் சொன்னான் -
செய்யும் செயல்களைவிட சிறந்தது புத்தி யோகமே
பலன்களில் நாட்டமுடையோர் விரும்புவது போகமே
எனவே சரணடைவாய் புத்தியில் என்ற கூற்றை ஏற்குமுன்
ஏனென்று சிறிது கேட்பாய் என் நண்பனே
நன்மை தீமையை கண்டறியும் திறன்
புத்திக்கு உண்டென்பதை அறிவாயல்லவா
சமநோக்கு பார்வை புத்தியால் அடைவதால்
செயல்களின் நல்லவையும் தீயவையும் அழியுமல்லவா
திறம்பட செய்யப்படும் செயல்களே யோகமாகும்
புத்திசாலிகள் தீயவை களைவது இவ்வழியே ஆகும்
பலன்களில் நாட்டமின்றியே அவர்தம் செயல்களும் சிறக்கும்
பிறப்பின் சுழற்சியிலிருந்து விடுபடுவதும் உறுதியாகும்
புத்தியைக் கொண்டு மோகத்தை களைவதனால்
கேட்டு உணர்ந்ததுவும் இனி கேட்டு உணரப்படுவதும்
சுருதி குறைந்து சுயநினைவிழந்து விடுவதால்
நடுநிலை என்றும் கொள்வாய் என் நண்பனே
எப்பொழுது உன் புத்தி கேட்டு உணர்ந்தவைகளை
புறக்கணித்து அசைவற்று சலனமற்று இருக்கிறதோ
எப்பொழுது ஆன்மாவில் நிலைத்து இருக்கிறதோ
அப்பொழுது ஆத்ம ஞானத்தை உணர்வாய் தோழனே
நான் கேட்டேன் –
இறையருளில் திளைத்து ஒன்றான மனிதனை
ஸ்தித பிரஞையுடன் வாழும் மனிதனை
இவ்வுலகில் அடையாளம் காண்பது எங்ஙனம்
அவர் பேசுவதும் அமர்வதும் நடப்பதும் எங்ஙனம்
கண்ணன் சொன்னான் –
ஆசைகளை அறவே விட்டொழித்திருப்பார்
மனதை தம்வசம் வைத்திருப்பார்
ஆன்மாவில் ஒன்றியே மகிழ்ந்திருப்பார்
சமநிலையடைந்த மனிதன் அவரேயாவார்
யாருடைய மனம் எந்நிலையிலும் கலங்கவில்லையோ
யார் செழிப்பிலும் போகத்தில் திளைக்கவில்லையோ
யார் பந்தம், பயம் மற்றும் கோபம் இவற்றின் பிடியில் சிக்கவில்லையோ
சந்தேகமின்றி அவரே ஞானி என்பதை தெரிந்து கொள்
அனைத்து திசைகளிலும் கால்களை உள்ளித்துக்கொள்ளும் ஆமையைப் போல்
புலன்களில் இருந்து தன் உணர்வுகளை இழுத்துக் கொள்வாரே
புலன்களும் அவரிடம் நெருங்க முடியாமல் தவிப்புடன் நிற்க
இறைவனைக் கண்ட அக்கணங்களில் அத்தவிப்பும் மறைந்திடுமே
நான் கேட்டேன் –
நீ கூறுவதை கேட்பதற்கு எளிதாய் இருக்கிறதே
எவரும் புத்தியை வெல்ல முடியும் என்றே தோன்றுகிறதே
சமநிலை அடைவது கடினமல்ல போல் தெரிகிறதே
நானே இலக்கு என்பது இப்பொழுது புரிகிறதே
கண்ணன் நகைத்துவிட்டு பிறகு கனிவுடன் சொன்னான் –
எளிதில் அடைவதல்ல நான் கூறியவை
புத்திசாலிகளையே புலன்கள் நன்கு ஏமாற்றுபவை
மனதை சூறாவளியாய் ஆக்கும் ஆற்றலுடையவை
முயற்சிகள் பல செய்தாலும் கலங்காதவை
நான் கேட்டேன் -
பிறகு எப்படி இருக்க வேண்டும் என்கிறாய் கேசவா
கண்ணன் தொடர்ந்தான் -
கண்கட்டும் புலன்களின் ஜாலங்களில் சிக்காமல்
அவற்றை அடக்கி ஒடுக்கி அமைதியாய்
புத்தி நிலைத்து அசையாது அமர்ந்திருக்க வேண்டும்
என்னை மட்டும் நினைத்திருக்க வேண்டும்
வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்த நான், செயலிழந்து அமர்ந்திருந்தேன். அப்பொழுதுதான் உணர்ந்தேன் ‘என்னை’ என்ற அவன் கூற்றினை?
ஓ............. இங்கு கண்ணன் உயிரும் உடலும், சதையும் அறிவை மயக்கும் அழகும் உள்ள கண்ணனாக இல்லாமல், கேலிப் பேசி சிரித்து மகிழும் கிருஷ்ணனாக இல்லாமல், எங்கும் நிறைந்த உருவும் அருவும் இல்லாத அந்த பரம்பொருளாய் அல்லவா சொல்கிறான்?
ஆனால் அவன் கூறுவது நடக்கக் கூடிய காரியமா என்ன? மனம் தொய்ந்தது.
இதோ ஒரு வருடத்திற்கு முன் நான் எழுதி வைத்த ஆங்கிலக் கவிதையை எடுத்துப் படிக்கிறேன்......
Beauty invites special compliments
I crave not to have one
Wealth cheers cruel attitudes
I need not retain one
Power rules ravening fowls
I grab not to enjoy one
Education shelters intellectual pleasures
I dream not to master one
Hatred guarantees feudal enemities
I desire not to possess one
Anger ignites mental imbalances
I like not to identify one
Jealousy cooks ugly delicacies
I yearn not to taste one
Selfishness adorns human minds
I strive not to buy one
Patience befriends many virtues
I dare not to lose one
Giving destroys grumbling greediness
I long to be blessed with one
Love transcends all boundaries
I pray only for such a one
இனி வரும் நாட்களில் கற்றுக் கொள்ளப் போகிறேனோ இல்லையோ, என் மனம் இக்கவிதையில் லயித்து இறுதி வரிகளில் நிலைக்கிறது.
Love transcends all boundaries
I pray only for such a one
இதுவே என் இன்றைய பிரார்த்தனையும்.
வரும் நாட்களிலாவது இந்த அஞ்ஞானிக்கு ஏதாவது புரியுமா என்ற சிந்தனையுடனே கீதையை வணங்கி மூடி வைக்கிறேன்....
-- அன்பே சிவம் - பத்மஜா
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=30
கீதை - பத்மஜா - நான்கு
Neither too loose nor too tight but just right.
- Gautama Buddha
..............
தற்கொலை ஏன் செய்து கொள்கிறார்கள்?
இன்பம் வரும்பொழுது எல்லையின்றி அனுபவிக்கும் மனம், துன்பம் வரும் நேரத்தில் அதை எதிர்கொள்ள முடியாமல் கோழையாவது எதனால்?
அடுத்தடுத்து வரும் இன்பம்தனை சளைக்காமல் ஏற்கும் மனம் போதும் என்று தற்கொலை செய்து கொள்வதில்லையே? ஆனால் துன்பக் காலத்தில் அதன் வலியிலும் வேதனையிலும் மட்டும் தற்கொலை எண்ணம் வருகிறதே?
இன்பத்தை முடிக்க விரும்பாதலால் தற்கொலை செய்து கொள்வதில்லையோ? துன்பம் முடிந்துவிடும் என்று தற்கொலை செய்து கொள்கிறார்களோ?
துன்பம் வருவது எதனால்?
எதிர்ப்பார்ப்புகளால் ஏமாற்றங்கள், ஏமாற்றங்களால் இயலாமை, இயலாமை ஏற்படுத்துவது கோபம் அல்லது சுய பச்சாதாபம், அதனால் வருவது வேதனைகள், பின்னே அதுவே மறக்க முடியாத மறுக்க முடியாத துன்பமாய் மாறிவிடுகிறதோ?
இரவையும் பகலையும் ஏற்கும் மனிதன், குளிரையும் வெய்யிலையும் ஏற்கும் மனிதன், அதில் இருந்து ஒரு பாடத்தை கற்க மறந்து விடுகிறான். இரவானது பகலாய் கண நேரத்தில் மாறிவிடுவதில்லை. காலம் என்னும் கண்ணுக்கு தெரியாத நுண்ணிழையைக் கொண்டு மெதுவாகவே மாற்றங்கள் நிகழ்கின்றன.
அது போலவே, நம் வாழ்விலும் காலம் காலனாய் இல்லாமல் மருந்தாய் வரவேற்கத் தகுந்த மாற்றமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதைப் புரிந்து கொள்ளாதலால்தான் தற்கொலை உடனடி தீர்வு என்று முடிவெடுக்கிறார்களோ?
இந்த அரிய மனித உயிரை மாய்த்துக் கொள்வதால் யாருக்கு என்ன பலன்? நம் துன்பதில் இருந்து விடுதலை அடைந்து விட்டால் போதுமா? நம்மை சார்ந்தவர்களை நம் முடிவினால் அளவிலா துன்பத்தில் அல்லவோ ஆழ்த்துகிறோம்?
இம்மாதிரி முடிவெடுக்கத் தூண்டுவது எது?
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சாத்தானும் தேவதையும் குடி கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. விகிதங்கள் தான் ஒருவனை மற்றொருவனிடமிருந்து வேறுபடுத்துகின்றது. அதனாலேயே சிலரை devilஎன்றும் சிலரை angel என்றும் கூறுகிறோம்.
‘Can devils ever become angels?’
இந்த கேள்வி என்னைத் தாக்குகிறதே! Devil ஆன நான் angelஆக முடியுமா? ஏன், என் இறுதி மூச்சுவரை போராட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இதற்கு வழி?
போன அத்தியாயத்தில் படித்த ஞானத்தின் பாடம் மிக கடினமாக அல்லவா இருக்கிறது எனக்கு. ஆகவே, என் நிலையறிந்து கண்ணன் சொன்னான் –
ஞானத்தின் வழியையே இதுவரை நான் எடுத்தியம்பினாலும் நண்பனே
யோகம் என்னும் மற்றுமொரு பாதையும் இருப்பதை அறிவாயோ
செயல்களால் கர்மங்களால் பின்னிப் பிணைந்த வாழ்வினிலிருந்து விடுதலையடைய, என் தோழனே
என் மற்றைய கூற்றையும் கேட்டுத் தெளியவே விரும்புவாயோ
என் தலையாட்டலில் மகிழ்ந்து அவன் தொடர்ந்தான் -
இதனால் எந்தவித கெடுதலும் உனக்கு வர வாய்ப்பில்லை
உன் முயற்சிகள் எதுவும் வீணடைய சாத்தியமில்லை
யோகத்தின் வழியை சிறிதளவேனும் சார்ந்து நடப்பவனுக்கோ
பயம் என்னும் கொடிய நோய் அண்டுவதில்லை
என்னை இவ்வாறு தேற்றியவன் மேலும் சொன்னான் -
எனதருமை தோழனே! கர்மப் பாதையில் நடப்பவன்
ஒருமுக நோக்கு எப்பொழுதும் தேவை என்பதை அறிவான்
அது இல்லாதவனுக்கோ பலவித மார்க்கங்களால் கவரப்படுவான்
அதன் எண்ணக் கிளர்ச்சியில் மயங்கியே இலக்கைத் தொலைப்பான்
அறிவிலிகளோ வேதங்களின் ஜால வார்த்தைகளில் மயங்கி கிடப்பர்
அதில் பிரதிபலிக்கும் இன்பங்களைத் தேடியே திரிவர்
ஆசைகளால் நிரம்பியே சொர்க்கம் ஒன்றே இலக்கு எனக்கொள்வர்
இன்பத்தை நோக்காக கொண்டே கர்மங்களை செய்வர்
மகாபாரதத்தை எழுதியவர் ஸ்ரீ கிருஷ்ண துவய்பாயன வியாஸர் என்பர் (பகவத் கீதை மகாபாரதத்தின் சாரமாகும்). அது மட்டுமின்றி, 18 வகை புராணங்களையும் எழுதியவர் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு முன் வியாஸர் என்ற பெயரில் பலர் இருந்தாலும் அவரை மட்டுமே குறிக்கும் பெயரானதற்கு காரணம் கடினமான வேதங்களை நான்காக பிரித்து மனித சமுதாயத்திற்கு தந்ததால்தான் என்பது தொன்றுதொட்டு வரும் கூற்று. அதனாலேயே அவரை ‘வேத வியாஸர்’ என்றழைத்து ‘குரு பூர்ணிமா’ அன்று மரியாதை செலுத்தி தலைவணங்குகிறோம்.
அவரே கீதையில் வேதங்களை சாடினால் எப்படி? அதையும் பரமாத்மாவான கண்ணனே இப்படி சொல்வது தகுமா என்ன?
என் மூளையை கணநேரத்தில் புரிந்து கொண்ட கண்ணன் என் அறிவை சிறிது தடவிக் கொடுத்தான். ஆம். இப்பொழுது புரிகிறது.
ஒவ்வொரு வேதமும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை – கர்ம காண்டமும் ஞான காண்டமும் ஆகும். கர்ம காண்டம் சுகம், சொர்க்கம் என்று சிற்றின்பத்தை வேண்டுபவருக்கு என்றும் ஞான காண்டம் பேரின்பத்தை வேண்டுபவருக்கும் என்றும் உள்ளன.
இதை மேலும் விரிவாக பிறகு பார்க்கலாம்.
இங்கு கண்ணன் கூறுவது கர்ம காண்டத்தில் குறிக்கப்பட்டுள்ள வேத மொழிகளே ஆகும் என்று இப்பொழுது எனக்கு புரிந்தது.
சுகத்திலும் போகத்திலும் திளைத்து எழ விரும்புபவர்களால் இந்த யோக முறையை அனுஷ்டிக்க முடியுமா?
அதற்கு கண்ணன் பதிலுரைத்தான் –
இவ்வாறு சுகம் இன்பம் என்று கவரப்பட்டோர் ஒருமுக நோக்கின்றி
மலையே அசைந்தாலும் நான் அசரேன் என்ற உறுதியின்றி
தியானத்தின் சுகம்தனை அனுபவிக்கும் பக்குவமின்றி
உன்னத சமாதியின் நிலையை அறியாமல் வாழ்வை வீணாக்குவர்
மேலும் கவனமாக கேள்! வேதங்கள் கையாள்வது மூவகை குணங்களாகும்
வேற்றுமைகளின் பிடியிலிருந்து விடுதலையடைவதே உனக்கு உகந்ததாகும்
சத்துவம் என்னும் தூய்மையில் என்றும் நிலைத்திருப்பதே உன்னதமாகும்
நான், எனது என்னும் எண்ணங்களிலிருந்து விடுபட்டு ஆன்மாவை உணர்வதே சிறந்ததாகும்
வெள்ளத்தின் நடுவில் கிணற்று நீரின் உபயோகம்தான் என்ன
ஆன்மாவை உணர்ந்த பிராமணனுக்கு வேதங்களின் பயன்தான் என்ன
இந்நிலையை அடைவது அத்தனை எளிதா என்ன
இருப்பினும் ஒரு சிறந்த வழியை சொல்கிறேன் ஏற்பாயா என்ன
பிராமணன் யார்? பிறப்பால் பிராமணன் என்பதால் ஆன்மாவை உணர்ந்தவன் என்றாகிவிடுமா? அல்லது அவன் மட்டுமே ஆன்மாவை உணரத் தகுந்தவன் என்று கூற முடியுமா?
இல்லை. எவனொருவன் தன் பழக்க வழக்கத்தால், சிந்தனை சிறப்புகளால் உயர்ந்த சத்துவக் குணத்தைக் கொண்டு நல்லவையே செய்கிறானோ அவனே பிரம்மம் என்னும் எங்கும் நிறைந்த பரமாத்மனை உணரத் தகுந்தவன். அவனே உணர்பவன். அவனே பிராமணன்.
சரி. கண்ணன் ஏதாவது சுலப வழியை சொல்கிறானா என்று சிறிது கவனித்து கேட்போமோ. அந்த அழகிய சிவந்த அதரங்களிலிருந்து வார்த்தைகள் இவ்வாறு என்னை வந்தடைகின்றன....
உன் கடமை என்றென்றும் பணி செய்து கிடப்பதே என்று புரிந்து கொள்
செயல்களின் பலன்களில் நாட்டம் இருக்க கூடாது என்பதில் கவனம் கொள்
பலன்களை எதிர்பார்த்து செயல்களை செய்யக் கூடாது என்பதில் உறுதி கொள்
செயல்களுக்கு பயந்து சோம்பேறியாகவும் திரிய கூடாது என்பதை குறித்துக் கொள்
ஆகவே கர்மங்களை செய்வதில் அச்சம் வேண்டாம் என் நண்பனே
உறவை அறுத்தெறிந்து யோகத்தில் நிலைப்பாய் என் தோழனே
வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை அடைவாய் என் அன்பனே
இச்சமநிலை அடைந்த மனமே யோகம் என்பதை அறிவாய் என் பார்த்தனே
யோகம் என்றவுடன் என் நினைவுக்கு வருவது இதுவே....
குரு தன் சீடனைப் பார்த்துக் கேட்கிறார், “என்ன செய்கிறாய் இப்பொழுது?”
அதற்கு சீடன், “ஐயா, யோகங்கள் கற்றுக் கொண்டிருந்தேன். இப்பொழுது அனைத்தையும் முடித்துவிட்டேன்,” என்றான்.
குரு அவனைப் பணிவுடன் பார்த்து, “யோகாவை முடித்து விட்டீர்களா? நான் உங்கள் காலில் அல்லவோ விழ வேண்டும். ஏனெனில் நீங்கள் பதஞ்சலியாகத்தான் இருக்க வேண்டும்,” என்றாராம்.
அது போல நம்முள் இருக்கும் அகங்காரம் என்ற தேவையற்ற அலங்காரத்தை களைய வழி உண்டா? மேலும் நம் படிப்பை தொடருவோம்.
-- அன்பே சிவம் - பத்மஜா
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=30
- Gautama Buddha
..............
தற்கொலை ஏன் செய்து கொள்கிறார்கள்?
இன்பம் வரும்பொழுது எல்லையின்றி அனுபவிக்கும் மனம், துன்பம் வரும் நேரத்தில் அதை எதிர்கொள்ள முடியாமல் கோழையாவது எதனால்?
அடுத்தடுத்து வரும் இன்பம்தனை சளைக்காமல் ஏற்கும் மனம் போதும் என்று தற்கொலை செய்து கொள்வதில்லையே? ஆனால் துன்பக் காலத்தில் அதன் வலியிலும் வேதனையிலும் மட்டும் தற்கொலை எண்ணம் வருகிறதே?
இன்பத்தை முடிக்க விரும்பாதலால் தற்கொலை செய்து கொள்வதில்லையோ? துன்பம் முடிந்துவிடும் என்று தற்கொலை செய்து கொள்கிறார்களோ?
துன்பம் வருவது எதனால்?
எதிர்ப்பார்ப்புகளால் ஏமாற்றங்கள், ஏமாற்றங்களால் இயலாமை, இயலாமை ஏற்படுத்துவது கோபம் அல்லது சுய பச்சாதாபம், அதனால் வருவது வேதனைகள், பின்னே அதுவே மறக்க முடியாத மறுக்க முடியாத துன்பமாய் மாறிவிடுகிறதோ?
இரவையும் பகலையும் ஏற்கும் மனிதன், குளிரையும் வெய்யிலையும் ஏற்கும் மனிதன், அதில் இருந்து ஒரு பாடத்தை கற்க மறந்து விடுகிறான். இரவானது பகலாய் கண நேரத்தில் மாறிவிடுவதில்லை. காலம் என்னும் கண்ணுக்கு தெரியாத நுண்ணிழையைக் கொண்டு மெதுவாகவே மாற்றங்கள் நிகழ்கின்றன.
அது போலவே, நம் வாழ்விலும் காலம் காலனாய் இல்லாமல் மருந்தாய் வரவேற்கத் தகுந்த மாற்றமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதைப் புரிந்து கொள்ளாதலால்தான் தற்கொலை உடனடி தீர்வு என்று முடிவெடுக்கிறார்களோ?
இந்த அரிய மனித உயிரை மாய்த்துக் கொள்வதால் யாருக்கு என்ன பலன்? நம் துன்பதில் இருந்து விடுதலை அடைந்து விட்டால் போதுமா? நம்மை சார்ந்தவர்களை நம் முடிவினால் அளவிலா துன்பத்தில் அல்லவோ ஆழ்த்துகிறோம்?
இம்மாதிரி முடிவெடுக்கத் தூண்டுவது எது?
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சாத்தானும் தேவதையும் குடி கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. விகிதங்கள் தான் ஒருவனை மற்றொருவனிடமிருந்து வேறுபடுத்துகின்றது. அதனாலேயே சிலரை devilஎன்றும் சிலரை angel என்றும் கூறுகிறோம்.
‘Can devils ever become angels?’
இந்த கேள்வி என்னைத் தாக்குகிறதே! Devil ஆன நான் angelஆக முடியுமா? ஏன், என் இறுதி மூச்சுவரை போராட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இதற்கு வழி?
போன அத்தியாயத்தில் படித்த ஞானத்தின் பாடம் மிக கடினமாக அல்லவா இருக்கிறது எனக்கு. ஆகவே, என் நிலையறிந்து கண்ணன் சொன்னான் –
ஞானத்தின் வழியையே இதுவரை நான் எடுத்தியம்பினாலும் நண்பனே
யோகம் என்னும் மற்றுமொரு பாதையும் இருப்பதை அறிவாயோ
செயல்களால் கர்மங்களால் பின்னிப் பிணைந்த வாழ்வினிலிருந்து விடுதலையடைய, என் தோழனே
என் மற்றைய கூற்றையும் கேட்டுத் தெளியவே விரும்புவாயோ
என் தலையாட்டலில் மகிழ்ந்து அவன் தொடர்ந்தான் -
இதனால் எந்தவித கெடுதலும் உனக்கு வர வாய்ப்பில்லை
உன் முயற்சிகள் எதுவும் வீணடைய சாத்தியமில்லை
யோகத்தின் வழியை சிறிதளவேனும் சார்ந்து நடப்பவனுக்கோ
பயம் என்னும் கொடிய நோய் அண்டுவதில்லை
என்னை இவ்வாறு தேற்றியவன் மேலும் சொன்னான் -
எனதருமை தோழனே! கர்மப் பாதையில் நடப்பவன்
ஒருமுக நோக்கு எப்பொழுதும் தேவை என்பதை அறிவான்
அது இல்லாதவனுக்கோ பலவித மார்க்கங்களால் கவரப்படுவான்
அதன் எண்ணக் கிளர்ச்சியில் மயங்கியே இலக்கைத் தொலைப்பான்
அறிவிலிகளோ வேதங்களின் ஜால வார்த்தைகளில் மயங்கி கிடப்பர்
அதில் பிரதிபலிக்கும் இன்பங்களைத் தேடியே திரிவர்
ஆசைகளால் நிரம்பியே சொர்க்கம் ஒன்றே இலக்கு எனக்கொள்வர்
இன்பத்தை நோக்காக கொண்டே கர்மங்களை செய்வர்
மகாபாரதத்தை எழுதியவர் ஸ்ரீ கிருஷ்ண துவய்பாயன வியாஸர் என்பர் (பகவத் கீதை மகாபாரதத்தின் சாரமாகும்). அது மட்டுமின்றி, 18 வகை புராணங்களையும் எழுதியவர் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு முன் வியாஸர் என்ற பெயரில் பலர் இருந்தாலும் அவரை மட்டுமே குறிக்கும் பெயரானதற்கு காரணம் கடினமான வேதங்களை நான்காக பிரித்து மனித சமுதாயத்திற்கு தந்ததால்தான் என்பது தொன்றுதொட்டு வரும் கூற்று. அதனாலேயே அவரை ‘வேத வியாஸர்’ என்றழைத்து ‘குரு பூர்ணிமா’ அன்று மரியாதை செலுத்தி தலைவணங்குகிறோம்.
அவரே கீதையில் வேதங்களை சாடினால் எப்படி? அதையும் பரமாத்மாவான கண்ணனே இப்படி சொல்வது தகுமா என்ன?
என் மூளையை கணநேரத்தில் புரிந்து கொண்ட கண்ணன் என் அறிவை சிறிது தடவிக் கொடுத்தான். ஆம். இப்பொழுது புரிகிறது.
ஒவ்வொரு வேதமும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை – கர்ம காண்டமும் ஞான காண்டமும் ஆகும். கர்ம காண்டம் சுகம், சொர்க்கம் என்று சிற்றின்பத்தை வேண்டுபவருக்கு என்றும் ஞான காண்டம் பேரின்பத்தை வேண்டுபவருக்கும் என்றும் உள்ளன.
இதை மேலும் விரிவாக பிறகு பார்க்கலாம்.
இங்கு கண்ணன் கூறுவது கர்ம காண்டத்தில் குறிக்கப்பட்டுள்ள வேத மொழிகளே ஆகும் என்று இப்பொழுது எனக்கு புரிந்தது.
சுகத்திலும் போகத்திலும் திளைத்து எழ விரும்புபவர்களால் இந்த யோக முறையை அனுஷ்டிக்க முடியுமா?
அதற்கு கண்ணன் பதிலுரைத்தான் –
இவ்வாறு சுகம் இன்பம் என்று கவரப்பட்டோர் ஒருமுக நோக்கின்றி
மலையே அசைந்தாலும் நான் அசரேன் என்ற உறுதியின்றி
தியானத்தின் சுகம்தனை அனுபவிக்கும் பக்குவமின்றி
உன்னத சமாதியின் நிலையை அறியாமல் வாழ்வை வீணாக்குவர்
மேலும் கவனமாக கேள்! வேதங்கள் கையாள்வது மூவகை குணங்களாகும்
வேற்றுமைகளின் பிடியிலிருந்து விடுதலையடைவதே உனக்கு உகந்ததாகும்
சத்துவம் என்னும் தூய்மையில் என்றும் நிலைத்திருப்பதே உன்னதமாகும்
நான், எனது என்னும் எண்ணங்களிலிருந்து விடுபட்டு ஆன்மாவை உணர்வதே சிறந்ததாகும்
வெள்ளத்தின் நடுவில் கிணற்று நீரின் உபயோகம்தான் என்ன
ஆன்மாவை உணர்ந்த பிராமணனுக்கு வேதங்களின் பயன்தான் என்ன
இந்நிலையை அடைவது அத்தனை எளிதா என்ன
இருப்பினும் ஒரு சிறந்த வழியை சொல்கிறேன் ஏற்பாயா என்ன
பிராமணன் யார்? பிறப்பால் பிராமணன் என்பதால் ஆன்மாவை உணர்ந்தவன் என்றாகிவிடுமா? அல்லது அவன் மட்டுமே ஆன்மாவை உணரத் தகுந்தவன் என்று கூற முடியுமா?
இல்லை. எவனொருவன் தன் பழக்க வழக்கத்தால், சிந்தனை சிறப்புகளால் உயர்ந்த சத்துவக் குணத்தைக் கொண்டு நல்லவையே செய்கிறானோ அவனே பிரம்மம் என்னும் எங்கும் நிறைந்த பரமாத்மனை உணரத் தகுந்தவன். அவனே உணர்பவன். அவனே பிராமணன்.
சரி. கண்ணன் ஏதாவது சுலப வழியை சொல்கிறானா என்று சிறிது கவனித்து கேட்போமோ. அந்த அழகிய சிவந்த அதரங்களிலிருந்து வார்த்தைகள் இவ்வாறு என்னை வந்தடைகின்றன....
உன் கடமை என்றென்றும் பணி செய்து கிடப்பதே என்று புரிந்து கொள்
செயல்களின் பலன்களில் நாட்டம் இருக்க கூடாது என்பதில் கவனம் கொள்
பலன்களை எதிர்பார்த்து செயல்களை செய்யக் கூடாது என்பதில் உறுதி கொள்
செயல்களுக்கு பயந்து சோம்பேறியாகவும் திரிய கூடாது என்பதை குறித்துக் கொள்
ஆகவே கர்மங்களை செய்வதில் அச்சம் வேண்டாம் என் நண்பனே
உறவை அறுத்தெறிந்து யோகத்தில் நிலைப்பாய் என் தோழனே
வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை அடைவாய் என் அன்பனே
இச்சமநிலை அடைந்த மனமே யோகம் என்பதை அறிவாய் என் பார்த்தனே
யோகம் என்றவுடன் என் நினைவுக்கு வருவது இதுவே....
குரு தன் சீடனைப் பார்த்துக் கேட்கிறார், “என்ன செய்கிறாய் இப்பொழுது?”
அதற்கு சீடன், “ஐயா, யோகங்கள் கற்றுக் கொண்டிருந்தேன். இப்பொழுது அனைத்தையும் முடித்துவிட்டேன்,” என்றான்.
குரு அவனைப் பணிவுடன் பார்த்து, “யோகாவை முடித்து விட்டீர்களா? நான் உங்கள் காலில் அல்லவோ விழ வேண்டும். ஏனெனில் நீங்கள் பதஞ்சலியாகத்தான் இருக்க வேண்டும்,” என்றாராம்.
அது போல நம்முள் இருக்கும் அகங்காரம் என்ற தேவையற்ற அலங்காரத்தை களைய வழி உண்டா? மேலும் நம் படிப்பை தொடருவோம்.
-- அன்பே சிவம் - பத்மஜா
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=30
கீதை - பத்மஜா - மூன்று
For it is in giving that we receive; it is in pardoning that we are pardoned; and it is in dying that we are born to eternal life.
- St. Francis of Assissi
.......
மரண வாக்குமூலம் – என்னை சிந்திக்க வைக்கும் ஒரு விஷயம்.
மரண வாக்குமூலத்திற்கு ஏன் இத்தனை மதிப்பு? மரணத் தருவாயில் ஒருவர் எத்தனைக் கொடுமைக்காரராக இருந்தாலும் உண்மையே பேசுவார் என்று எந்த ஆதாரம் கொண்டு நம்பப்படுகின்றன?
ஞானிகள், புரட்சியாளர்கள் போன்று உலகில் ஒரு சிலர் மட்டுமே மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் சாமானியர்களுக்கு மரணம் என்பது பயம் தரக்கூடிய ஒன்றாகவே உள்ளது. உதாரணத்திற்கு ஒரு துப்பாக்கியை என் நெற்றிப் பொட்டில் வைத்தால் என்னுள் பயம் வேகமாக வந்து உறவாடும் என்பது உறுதி. அது ஏன்?
புத்தகத்தில் படித்ததைப் போல நரகத்திற்கு போவோம் துன்பத்தை அனுபவிப்போம் என்ற பயமா? இல்லை நம் மரணத்தால் பல அன்புள்ளங்களை நிரந்தரமாக விட்டு பிரிந்துவிடுவோமே என்ற வருத்தமா? இல்லை தற்பொழுது அனுபவிக்கும் சுகத்தை விட்டுவிட்டு வேறு உலகில் என்ன மாதிரி கஷ்டபடப் போகிறோமோ என்ற சோகமா? இல்லை இந்து நம்பிக்கைப்படி மறுபிறவியில் என்ன மாதிரி சூழ்நிலையில் மறுபடியும் பிறப்பேனோ என்ற அச்சமா? இல்லை உடலோடு உணர்வுகளோடு ஐம்புலன்களோடு வாழ்ந்த வாழ்க்கை ஒன்றுமின்றி காற்றில் கரைந்து விடுமே என்ற துயரமா? இல்லை வேறு பல காரணங்களா?
அடிப்படையில் இந்த பயத்திற்கு முக்கியக் காரணம் வாழ்ந்த வாழ்க்கைதானோ?
‘Paga kunguru baandh Meera naachire….’ - மீராவின் இந்த பஜன் அவளின் சோதனை நிறைந்த வாழ்க்கையை விளக்கினாலும் என்றும் ஆனந்த கூத்தாடிய பெண்மணி அவள். அவளை விஷம் கொடுத்து கொல்ல நினைத்த போதும் சிரித்துக் கொண்டே குடித்துகண்ணன் மேல் இருந்த உயர்ந்த காதலாலே உயிர் பிழைத்த விந்தையை இந்த பாடலின் மூலம் உலகுக்கு உணர்த்தியவள். அவள் பாடலை உருகி ரசித்தாலும் அவளை போல் எப்பொழுதும் ஆனந்தத்தில் இருக்க முடிவதில்லை.
ஏன்?
வாழ்க்கையை அலசும் போது மகிழ்ச்சியில் குழந்தையின் வெகுளித்தனத்துடன் ஓடி வானத்தை தொட நினைத்த கணங்களும் தெரிந்தது. அப்படியே அந்த சந்தோஷத்தில்; அதே துள்ளிக் குதிக்கும் மனதுடன் இறைவனிடம் நன்றி சொன்ன கணங்களும் தெரிந்தது. அந்த இனிமையான பொழுதிலேயே அவன் காலடியிலேயே உயிரை விட துடித்த கணங்களும் தெரிந்தது. துயரத்தில் வேதனையில் கண்ணீர் சிந்திய கணங்களும் தெளிவாக தெரிந்தது.
பிறப்பும் இறப்பும் ஒவ்வொருவருக்கும் தனிதனியே நிகழும் போது இந்த இடைபட்ட காலகட்டமான வாழ்க்கையில் மற்ற பல உயிர்களின் ஆதிக்கம் தான் எத்தனை! ஆச்சரியம்தான். சிரிப்பதை தவிர வேறென்ன செய்வது! மாயை என்று ஏதோ சொல்கிறார்களே அது இதுதானோ?
வாழ்க்கை பொய்மை கலந்ததா அல்லது உண்மையா? மகிழ்ச்சி துக்கம் என்ற இரு நூலைக் கொண்டு நம் வாழ்வும் பொம்மலாட்டத்தில் ஆடும் பொம்மை போல் ஆடுவதன் காரணம்தான் என்ன?
ஜனனம்-மரணம்; வாழ்வின் சுக-துக்கங்கள், ஏற்றத்தாழ்வுகள், வாழும் விதிமுறைகள், தவறு-பாவம் வித்தியாசங்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் உறவுகளின் வினோத தாக்கங்கள், எதையோ தேடி ஓடிக் கொண்டிருக்கும் நோக்கங்கள், மனதின் சஞ்சலங்கள், ‘வாழ்க்கையை வீணடித்து விட்டோமோ, இனி இப்படி இருக்க கூடாது’ என்று வெதும்பி தவிக்கும் ஒரு சில பிரசவ கால ஞானங்கள் - இதையெல்லாம் நினைத்த போது ஆச்சரியமாகவே இருந்தது.
இந்த வாழ்க்கை மேடையில் துக்க நேரத்திலும் சிரித்து கொண்டே எப்படி இருப்பது? எனக்கு தெரியவில்லை. துக்கத்தை அன்புடன் அழைத்து குளிர்பானம் கொடுத்து விருந்தோம்பல் செய்யும் நிதானம் எனக்கு இருந்தால் கீதையை படித்துப் புரிந்து வாழ்க்கையில் பயில இந்த கடின முயற்சி எடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன?
அதனால் நான் கண்ணனிடம் கேட்டேன் -
மனதில் உறுதியின்றி தொய்ந்து போகிறேனா
அடுத்து என்ன என்று புரியாமல் குழம்புகிறேனா
மகிழ்ச்சியிலே என்னை மறந்து துள்ளி குதிக்கிறேனா
வேதனையில் வெந்து நொந்து தனியே தவிக்கிறேனா
வாழ்வை புரிந்து கொள்ளாமல் நான் வாழ்கிறேனா
சுக-துக்கத்தின் அலைகளால் தடுமாறி போகிறேனா
எது நிச்சயம் என்று அறியாமல் தடுமாறுகிறேனா
யார் நித்தியம் என்று உணராமல் ஏங்குகிறேனா
இறப்பின் இழப்பில் என்னை தேட முயல்கிறேனா
இறைவனிடம் தினமும் இதற்கு நியாயம் கேட்கிறேனா
உயிர் இருந்தும் துக்கத்தால் இறந்தவரை கண்டு கலங்குகிறேனா
உடலின் நிலையற்ற தன்மையை கேட்டும் நன்றே விழிக்கிறேனா
என்னை தேற்றவே உன் கையை எதிர்பார்க்கிறேனா
ஆதரவாய் அணைக்கவே உன்னை வேண்டுகிறேனா
என் குருவே என்று உன்னையே சார்ந்து நிற்கிறேனா
உன் அன்பான பார்வைக்காகவே ஏங்கித் தவிக்கிறேனா
முட்டாளை பார்த்தும் சிரிக்காமல் இருக்கும் நந்தகுமாரனே
என்னை உதறித் தவிர்க்காமல் ஏற்று கொண்ட ஆசானே
அன்பினால் என்னை வென்று விட்ட என் கண்ணனே
எனக்கு புரியும்படி பதில் சொல்வாய் என் தோழனே
கண்ணன் சொன்னான் -
உயர்ந்த பாரத குடிமகனே!
எதையும் கண்டு கலங்கி நீ அழ தேவையில்லை
உலகில் உள்ள எவரும் என்றும் நிரந்தரம் இல்லை
நீ உண்மை என்று நினைப்பது எதுவும் உண்மையில்லை
இதை உணர்ந்த ஞானியர்க்கு கவலை ஏதுமில்லை
எங்கும் நிறைந்த அது அழிவை காண்பதில்லை
உடலுக்கு அழிவுண்டு ஆன்மாவுக்கு அழிவு என்றும் இல்லை
யாரும் யாரையும் கொல்வதும் இல்லை கொல்லப்படுவதும் இல்லை
எதையும் தான் செய்வதாக நினைப்பவன் உண்மையை உணர்வதில்லை
உயிருக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை
இந்த சுழற்சியில் எங்கும் யாரும் மறைந்து போவதும் இல்லை
நித்தியத்தை அறிந்தவன் யாரையும் கொல்வது சாத்தியமில்லை
தான் கொல்லப்படுவதாக வருந்தி ஓடி ஒளிந்து கொள்வதில் பயனில்லை
நண்பனே! கிழிந்த துணிகளை களைந்து புதியதை உடுத்துவதை போல
நைந்து போன உடலை விட்டு உயிர் வேறு புதிய உடலில் நுழைகிறது
பழைய துணிகளை களையும் வேளையிலே புதியதை மனம் வரவேற்கிறது
புதிய உடலை நோக்கி உயிர் செல்லும் போது மட்டும் ஏன் வருந்துகிறது
மேலும் கேள்! அது அனைத்திற்கும் அப்பாற்பட்டது
ஆயுதங்களால் கிழியாது நெருப்பினால் எரியாது
நீரினால் நனையாது காற்றினால் உலராது
எங்கும் நிறைந்துள்ள அதைப் பற்றி நினைக்கவும் இயலாது
இந்த ஞானத்தை உன் சிந்தையில் எப்பொழுதும் தக்க வைத்து கொள்
பிறப்பும் இறப்பும் நித்தியம் என்று நினைத்தாலும் வருந்த தேவையில்லை
ஏனெனில் பிறப்பு என்றால் இறப்பு நிச்சயம் என்பதில் இரு வேறு கருத்துமில்லை
அதைப் போல இறப்பு என்றால் பிறப்பும் உண்டு என்ற ஞானியர் கூற்று பொய்யில்லை
உன் கையை மீறின இந்த சுழற்சியை நினைத்து ஏன் வருந்த வேண்டும்?
கனவில் வரும் குழந்தையின் நோயை கண்டு தான் ஏன் அழ வேண்டும்?
ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று இடையில் மட்டும் இருப்பதாக ஏன் கற்பனை செய்ய வேண்டும்?
சிந்தித்து பார்! இழப்பை நினைத்து ஏன் மனம் வேதனையடைய வேண்டும்?
ஒருவர் ஆத்ம ஞானத்தை ஆச்சரியமாக பார்க்கிறார்
மற்றொருவர் ஆச்சரியத்துடன் அதைப்பற்றி பேசுகிறார்
வேறு ஒருவரோ மிகுந்த ஆச்சரித்துடனே இதைப் பற்றி கேட்கிறார்
உண்மை உணராததால் எவரும் புரியாமலே விழிக்கிறார்
உடலில் குடிகொண்டிருக்கும் ஆன்மா என்றுமே நிலையானது
உண்மையை அறிந்ததால் எதற்காகவும் வருந்தாமல் இருப்பதே நல்லது
மேலும் உன் கடமையில் இருந்து வழுவாமல் போரிடுவதே சிறந்தது
இதை விட மேலான கடமை ஒரு வீரனுக்கு தான் ஏது?
வீரனுக்கு என்றென்றும் அழகு போர் புரிவதே
அதில் பங்கு கொண்டு பெருமையடைவதும் அவன் இயல்பே
சொர்க்கத்தின் கதவை திறக்கும் திறவுகோல் இதுவே
என்று நன்கு புரிந்து போர் புரிவாய் என் தோழனே
சிம்மத்தை போல கர்ஜித்து உயிரை துச்சமாக நினைத்தவன் அல்லவோ
அதர்மத்திற்கு எதிராக போர் புரியவே துடித்தவன் அல்லவோ
நீயே பின் வாங்கினால் பாவத்திற்கு ஆளாவது உறுதி அல்லவோ
உன் புகழும் அழிந்து இழி நிலை அடைவதை தடுப்பது யாருமல்லவோ
போரில் மடிவது சாமானியர்க்கு கிடைக்கும் வரமா என்ன
புறமுதுகிட்டு ஓடும் வீரன் உயிர் வாழ்வதில் அர்த்தம் தான் என்ன
மக்களும் உன் இழிநிலையை நினைவு கூர்ந்து பார்ப்பதில் சந்தேகமென்ன
மேலும் சொல்கிறேன்நான் சொல்வதை போல் நடப்பாயா என்ன
ஆற்றல் குறைந்து பயத்தினால் போர்க்களத்திலிருந்து ஓடியதாக பேசப்படுவாய்
உன் புகழ் அழிந்து அனைவராலும் கேவலமாக பார்க்கப்படுவாய்
உன் மதிப்பும் மரியாதையும் மறைந்து இழிநிலைக்கு தள்ளப்படுவாய்
பகைவர்களாலும் சகிக்க முடியாத மொழிகளால் பேசப்பட்டு கேவலப்படுவாய்
வீரனுக்கு இதை விட வேதனை தருவது வேறு எதுவும் இருக்க முடியாது
உயிரை விட மானம் பெரிது என்பது உனக்கு தெரியாமல் இருக்காது
இறந்தால் சொர்க்கம்இருந்தால் வெற்றி என்ற உண்மை பொய்யாகாது
சிலிர்த்தெழுந்து போர் செய்வாய்உன் மனக்கிளர்ச்சி இங்கு செல்லாது
வாழ்வின் ரகசியத்தை உனக்கு சொல்கிறேன் என் அருமை நண்பனே
இன்பம்-துன்பம்,லாபம்-நஷ்டம்,வெற்றி-தோல்வி இவை யாவும் வருவது சகஜமே
போரை போருக்காக வேண்டி செய்யும் போது பாவத்திற்கு இங்கு இடமே இல்லையே
இவை யாவற்றையும் சமநோக்கில் மட்டும் பார்த்து போர் புரிவாயே
நான் இது வரை சொன்னது யாவும் ஞானத்தை சார்ந்த பாடம் ஆகும்
இனி யோக முறையைப் பற்றி விளக்கப் போகிறேன் உன் சித்தமும் சிறிது தெளியும்
செயல் புரிவதன் தாத்பர்யத்தை அறிந்து உன் கலக்கமும் கலையும்
என் உன்னத சீடனாக மாறி உன் மனக்கிளர்ச்சியும் மறையும்
எழுதி விட்டு நிமிர்ந்த போது எப்பொழுதோ படித்த இந்த வாக்கியம் என் நினைவுக்கு வந்தது.
“Pain is inevitable but suffering is optional”
இறப்பைப் பற்றி அலசும் போது என் நினைவுக்கு வருவது இந்த epitaph - ஒரு தந்தை தன் இறந்த மகனுக்காக கல்வெட்டில் பதித்துள்ள இந்த வாக்கியம் என்னை கரைத்தது.
"He went too far in the search of flowers."
துக்க நேரங்களிலும் சிலர் உணர்வுகளை எத்தனை அழகாகவே வெளிப்படுத்துகின்றனர்! ஆச்சரியமே!
போகப் போக கீதையின் சாரம் எனக்கும் சிறிது புரியுமோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- St. Francis of Assissi
.......
மரண வாக்குமூலம் – என்னை சிந்திக்க வைக்கும் ஒரு விஷயம்.
மரண வாக்குமூலத்திற்கு ஏன் இத்தனை மதிப்பு? மரணத் தருவாயில் ஒருவர் எத்தனைக் கொடுமைக்காரராக இருந்தாலும் உண்மையே பேசுவார் என்று எந்த ஆதாரம் கொண்டு நம்பப்படுகின்றன?
ஞானிகள், புரட்சியாளர்கள் போன்று உலகில் ஒரு சிலர் மட்டுமே மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் சாமானியர்களுக்கு மரணம் என்பது பயம் தரக்கூடிய ஒன்றாகவே உள்ளது. உதாரணத்திற்கு ஒரு துப்பாக்கியை என் நெற்றிப் பொட்டில் வைத்தால் என்னுள் பயம் வேகமாக வந்து உறவாடும் என்பது உறுதி. அது ஏன்?
புத்தகத்தில் படித்ததைப் போல நரகத்திற்கு போவோம் துன்பத்தை அனுபவிப்போம் என்ற பயமா? இல்லை நம் மரணத்தால் பல அன்புள்ளங்களை நிரந்தரமாக விட்டு பிரிந்துவிடுவோமே என்ற வருத்தமா? இல்லை தற்பொழுது அனுபவிக்கும் சுகத்தை விட்டுவிட்டு வேறு உலகில் என்ன மாதிரி கஷ்டபடப் போகிறோமோ என்ற சோகமா? இல்லை இந்து நம்பிக்கைப்படி மறுபிறவியில் என்ன மாதிரி சூழ்நிலையில் மறுபடியும் பிறப்பேனோ என்ற அச்சமா? இல்லை உடலோடு உணர்வுகளோடு ஐம்புலன்களோடு வாழ்ந்த வாழ்க்கை ஒன்றுமின்றி காற்றில் கரைந்து விடுமே என்ற துயரமா? இல்லை வேறு பல காரணங்களா?
அடிப்படையில் இந்த பயத்திற்கு முக்கியக் காரணம் வாழ்ந்த வாழ்க்கைதானோ?
‘Paga kunguru baandh Meera naachire….’ - மீராவின் இந்த பஜன் அவளின் சோதனை நிறைந்த வாழ்க்கையை விளக்கினாலும் என்றும் ஆனந்த கூத்தாடிய பெண்மணி அவள். அவளை விஷம் கொடுத்து கொல்ல நினைத்த போதும் சிரித்துக் கொண்டே குடித்துகண்ணன் மேல் இருந்த உயர்ந்த காதலாலே உயிர் பிழைத்த விந்தையை இந்த பாடலின் மூலம் உலகுக்கு உணர்த்தியவள். அவள் பாடலை உருகி ரசித்தாலும் அவளை போல் எப்பொழுதும் ஆனந்தத்தில் இருக்க முடிவதில்லை.
ஏன்?
வாழ்க்கையை அலசும் போது மகிழ்ச்சியில் குழந்தையின் வெகுளித்தனத்துடன் ஓடி வானத்தை தொட நினைத்த கணங்களும் தெரிந்தது. அப்படியே அந்த சந்தோஷத்தில்; அதே துள்ளிக் குதிக்கும் மனதுடன் இறைவனிடம் நன்றி சொன்ன கணங்களும் தெரிந்தது. அந்த இனிமையான பொழுதிலேயே அவன் காலடியிலேயே உயிரை விட துடித்த கணங்களும் தெரிந்தது. துயரத்தில் வேதனையில் கண்ணீர் சிந்திய கணங்களும் தெளிவாக தெரிந்தது.
பிறப்பும் இறப்பும் ஒவ்வொருவருக்கும் தனிதனியே நிகழும் போது இந்த இடைபட்ட காலகட்டமான வாழ்க்கையில் மற்ற பல உயிர்களின் ஆதிக்கம் தான் எத்தனை! ஆச்சரியம்தான். சிரிப்பதை தவிர வேறென்ன செய்வது! மாயை என்று ஏதோ சொல்கிறார்களே அது இதுதானோ?
வாழ்க்கை பொய்மை கலந்ததா அல்லது உண்மையா? மகிழ்ச்சி துக்கம் என்ற இரு நூலைக் கொண்டு நம் வாழ்வும் பொம்மலாட்டத்தில் ஆடும் பொம்மை போல் ஆடுவதன் காரணம்தான் என்ன?
ஜனனம்-மரணம்; வாழ்வின் சுக-துக்கங்கள், ஏற்றத்தாழ்வுகள், வாழும் விதிமுறைகள், தவறு-பாவம் வித்தியாசங்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் உறவுகளின் வினோத தாக்கங்கள், எதையோ தேடி ஓடிக் கொண்டிருக்கும் நோக்கங்கள், மனதின் சஞ்சலங்கள், ‘வாழ்க்கையை வீணடித்து விட்டோமோ, இனி இப்படி இருக்க கூடாது’ என்று வெதும்பி தவிக்கும் ஒரு சில பிரசவ கால ஞானங்கள் - இதையெல்லாம் நினைத்த போது ஆச்சரியமாகவே இருந்தது.
இந்த வாழ்க்கை மேடையில் துக்க நேரத்திலும் சிரித்து கொண்டே எப்படி இருப்பது? எனக்கு தெரியவில்லை. துக்கத்தை அன்புடன் அழைத்து குளிர்பானம் கொடுத்து விருந்தோம்பல் செய்யும் நிதானம் எனக்கு இருந்தால் கீதையை படித்துப் புரிந்து வாழ்க்கையில் பயில இந்த கடின முயற்சி எடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன?
அதனால் நான் கண்ணனிடம் கேட்டேன் -
மனதில் உறுதியின்றி தொய்ந்து போகிறேனா
அடுத்து என்ன என்று புரியாமல் குழம்புகிறேனா
மகிழ்ச்சியிலே என்னை மறந்து துள்ளி குதிக்கிறேனா
வேதனையில் வெந்து நொந்து தனியே தவிக்கிறேனா
வாழ்வை புரிந்து கொள்ளாமல் நான் வாழ்கிறேனா
சுக-துக்கத்தின் அலைகளால் தடுமாறி போகிறேனா
எது நிச்சயம் என்று அறியாமல் தடுமாறுகிறேனா
யார் நித்தியம் என்று உணராமல் ஏங்குகிறேனா
இறப்பின் இழப்பில் என்னை தேட முயல்கிறேனா
இறைவனிடம் தினமும் இதற்கு நியாயம் கேட்கிறேனா
உயிர் இருந்தும் துக்கத்தால் இறந்தவரை கண்டு கலங்குகிறேனா
உடலின் நிலையற்ற தன்மையை கேட்டும் நன்றே விழிக்கிறேனா
என்னை தேற்றவே உன் கையை எதிர்பார்க்கிறேனா
ஆதரவாய் அணைக்கவே உன்னை வேண்டுகிறேனா
என் குருவே என்று உன்னையே சார்ந்து நிற்கிறேனா
உன் அன்பான பார்வைக்காகவே ஏங்கித் தவிக்கிறேனா
முட்டாளை பார்த்தும் சிரிக்காமல் இருக்கும் நந்தகுமாரனே
என்னை உதறித் தவிர்க்காமல் ஏற்று கொண்ட ஆசானே
அன்பினால் என்னை வென்று விட்ட என் கண்ணனே
எனக்கு புரியும்படி பதில் சொல்வாய் என் தோழனே
கண்ணன் சொன்னான் -
உயர்ந்த பாரத குடிமகனே!
எதையும் கண்டு கலங்கி நீ அழ தேவையில்லை
உலகில் உள்ள எவரும் என்றும் நிரந்தரம் இல்லை
நீ உண்மை என்று நினைப்பது எதுவும் உண்மையில்லை
இதை உணர்ந்த ஞானியர்க்கு கவலை ஏதுமில்லை
எங்கும் நிறைந்த அது அழிவை காண்பதில்லை
உடலுக்கு அழிவுண்டு ஆன்மாவுக்கு அழிவு என்றும் இல்லை
யாரும் யாரையும் கொல்வதும் இல்லை கொல்லப்படுவதும் இல்லை
எதையும் தான் செய்வதாக நினைப்பவன் உண்மையை உணர்வதில்லை
உயிருக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை
இந்த சுழற்சியில் எங்கும் யாரும் மறைந்து போவதும் இல்லை
நித்தியத்தை அறிந்தவன் யாரையும் கொல்வது சாத்தியமில்லை
தான் கொல்லப்படுவதாக வருந்தி ஓடி ஒளிந்து கொள்வதில் பயனில்லை
நண்பனே! கிழிந்த துணிகளை களைந்து புதியதை உடுத்துவதை போல
நைந்து போன உடலை விட்டு உயிர் வேறு புதிய உடலில் நுழைகிறது
பழைய துணிகளை களையும் வேளையிலே புதியதை மனம் வரவேற்கிறது
புதிய உடலை நோக்கி உயிர் செல்லும் போது மட்டும் ஏன் வருந்துகிறது
மேலும் கேள்! அது அனைத்திற்கும் அப்பாற்பட்டது
ஆயுதங்களால் கிழியாது நெருப்பினால் எரியாது
நீரினால் நனையாது காற்றினால் உலராது
எங்கும் நிறைந்துள்ள அதைப் பற்றி நினைக்கவும் இயலாது
இந்த ஞானத்தை உன் சிந்தையில் எப்பொழுதும் தக்க வைத்து கொள்
பிறப்பும் இறப்பும் நித்தியம் என்று நினைத்தாலும் வருந்த தேவையில்லை
ஏனெனில் பிறப்பு என்றால் இறப்பு நிச்சயம் என்பதில் இரு வேறு கருத்துமில்லை
அதைப் போல இறப்பு என்றால் பிறப்பும் உண்டு என்ற ஞானியர் கூற்று பொய்யில்லை
உன் கையை மீறின இந்த சுழற்சியை நினைத்து ஏன் வருந்த வேண்டும்?
கனவில் வரும் குழந்தையின் நோயை கண்டு தான் ஏன் அழ வேண்டும்?
ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று இடையில் மட்டும் இருப்பதாக ஏன் கற்பனை செய்ய வேண்டும்?
சிந்தித்து பார்! இழப்பை நினைத்து ஏன் மனம் வேதனையடைய வேண்டும்?
ஒருவர் ஆத்ம ஞானத்தை ஆச்சரியமாக பார்க்கிறார்
மற்றொருவர் ஆச்சரியத்துடன் அதைப்பற்றி பேசுகிறார்
வேறு ஒருவரோ மிகுந்த ஆச்சரித்துடனே இதைப் பற்றி கேட்கிறார்
உண்மை உணராததால் எவரும் புரியாமலே விழிக்கிறார்
உடலில் குடிகொண்டிருக்கும் ஆன்மா என்றுமே நிலையானது
உண்மையை அறிந்ததால் எதற்காகவும் வருந்தாமல் இருப்பதே நல்லது
மேலும் உன் கடமையில் இருந்து வழுவாமல் போரிடுவதே சிறந்தது
இதை விட மேலான கடமை ஒரு வீரனுக்கு தான் ஏது?
வீரனுக்கு என்றென்றும் அழகு போர் புரிவதே
அதில் பங்கு கொண்டு பெருமையடைவதும் அவன் இயல்பே
சொர்க்கத்தின் கதவை திறக்கும் திறவுகோல் இதுவே
என்று நன்கு புரிந்து போர் புரிவாய் என் தோழனே
சிம்மத்தை போல கர்ஜித்து உயிரை துச்சமாக நினைத்தவன் அல்லவோ
அதர்மத்திற்கு எதிராக போர் புரியவே துடித்தவன் அல்லவோ
நீயே பின் வாங்கினால் பாவத்திற்கு ஆளாவது உறுதி அல்லவோ
உன் புகழும் அழிந்து இழி நிலை அடைவதை தடுப்பது யாருமல்லவோ
போரில் மடிவது சாமானியர்க்கு கிடைக்கும் வரமா என்ன
புறமுதுகிட்டு ஓடும் வீரன் உயிர் வாழ்வதில் அர்த்தம் தான் என்ன
மக்களும் உன் இழிநிலையை நினைவு கூர்ந்து பார்ப்பதில் சந்தேகமென்ன
மேலும் சொல்கிறேன்நான் சொல்வதை போல் நடப்பாயா என்ன
ஆற்றல் குறைந்து பயத்தினால் போர்க்களத்திலிருந்து ஓடியதாக பேசப்படுவாய்
உன் புகழ் அழிந்து அனைவராலும் கேவலமாக பார்க்கப்படுவாய்
உன் மதிப்பும் மரியாதையும் மறைந்து இழிநிலைக்கு தள்ளப்படுவாய்
பகைவர்களாலும் சகிக்க முடியாத மொழிகளால் பேசப்பட்டு கேவலப்படுவாய்
வீரனுக்கு இதை விட வேதனை தருவது வேறு எதுவும் இருக்க முடியாது
உயிரை விட மானம் பெரிது என்பது உனக்கு தெரியாமல் இருக்காது
இறந்தால் சொர்க்கம்இருந்தால் வெற்றி என்ற உண்மை பொய்யாகாது
சிலிர்த்தெழுந்து போர் செய்வாய்உன் மனக்கிளர்ச்சி இங்கு செல்லாது
வாழ்வின் ரகசியத்தை உனக்கு சொல்கிறேன் என் அருமை நண்பனே
இன்பம்-துன்பம்,லாபம்-நஷ்டம்,வெற்றி-தோல்வி இவை யாவும் வருவது சகஜமே
போரை போருக்காக வேண்டி செய்யும் போது பாவத்திற்கு இங்கு இடமே இல்லையே
இவை யாவற்றையும் சமநோக்கில் மட்டும் பார்த்து போர் புரிவாயே
நான் இது வரை சொன்னது யாவும் ஞானத்தை சார்ந்த பாடம் ஆகும்
இனி யோக முறையைப் பற்றி விளக்கப் போகிறேன் உன் சித்தமும் சிறிது தெளியும்
செயல் புரிவதன் தாத்பர்யத்தை அறிந்து உன் கலக்கமும் கலையும்
என் உன்னத சீடனாக மாறி உன் மனக்கிளர்ச்சியும் மறையும்
எழுதி விட்டு நிமிர்ந்த போது எப்பொழுதோ படித்த இந்த வாக்கியம் என் நினைவுக்கு வந்தது.
“Pain is inevitable but suffering is optional”
இறப்பைப் பற்றி அலசும் போது என் நினைவுக்கு வருவது இந்த epitaph - ஒரு தந்தை தன் இறந்த மகனுக்காக கல்வெட்டில் பதித்துள்ள இந்த வாக்கியம் என்னை கரைத்தது.
"He went too far in the search of flowers."
துக்க நேரங்களிலும் சிலர் உணர்வுகளை எத்தனை அழகாகவே வெளிப்படுத்துகின்றனர்! ஆச்சரியமே!
போகப் போக கீதையின் சாரம் எனக்கும் சிறிது புரியுமோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கீதை - பத்மஜா - இரண்டு
Love gives naught but itself and takes naught but itself. Love possesses not nor would it be possessed. For love is sufficient unto love.
- The Prophet, Kahlil Gibran
........
Krishna Govinda Gopal Gaate Raho…
Log kahte hain Bhagvan aate nahin…
Draupadi ki tarah bulaate nahin….
Shabari ki tarah khilaate nahin…
மாறி மாறி இந்த வரிகள் ஒலிக்க, நடன ஒத்திகை செய்து கொண்டிருந்த பெண் அந்த பெரிய கூடத்தில் சலங்கைகள் சிணுங்க உருக்கமான பாவத்துடன் ஆடிக் கொண்டிருந்தாள். ராமாயண சொற்பொழிவு முடிந்து சில நிகழ்ச்சிகளை வைத்திருந்தார்கள். அதில் இதுவும் ஒன்று.
ஓரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சபரியை சிலாகித்து அவள் செய்யும் போதுஅடக்கமாட்டாமல் அழுகை வந்தது.
ராமாயணத்தில் சபரியை எனக்கு மிகவும் பிடிக்கும். என்ன ஒரு அலுக்காதசலிக்காத அன்பை வெளிப்படுத்தியவள்! சுத்தமான அன்புடன் தன் குருவின் வாய்மொழியை நம்பி ஒவ்வொரு நாளும் தன் இறைவனின் வருகைக்காக குடிலை சுத்தமாக்கி, பழங்களை பறித்து, வழியில் அமர்ந்து இறைவன் வருகிறானா என்று வருடக்கணக்கில் காத்தது மட்டுமில்லாமல் ராமரின் வருகையின் போது ஒவ்வொரு பழத்தையும் சுவைத்து பிறகே படைத்த தூய இதயம் கொண்டவள்.
நடனப்பெண்ணே! நடனத்துக்காக பாவங்களை காட்டி அபிநயம் பிடிக்கிறாயா அல்லது உன் மனதில் கண்ணனையும், திரௌபதியையும், சபரியையும் நினைத்துதான் ஆடுகிறாயா? ஆனால் ஒவ்வொரு ஒத்திகை முடிந்த பின்னும் நீ கேலியும் கூத்துமாய் இருக்கிறாயே! என்னால் மட்டும் மனதிலிருந்து பாவங்களை சுலபமாக மாற்ற முடியவில்லையே!
அரண்மணை போன்ற வீட்டில் குளியலறை தேடி ஓடினேன். (அந்த தனித்த இடத்தில் தான் எப்பொழுதும் என் அழுத்தங்களும்அழுகைகளும் தடைகல் ஏதுமின்றி என்னுள்ளிருந்து வெளி வரும்.)
கண்ணிருந்தும் காணவில்லை
வாயிருந்தும் பேசவில்லை
செவியிருந்தும் கேட்கவில்லை
அழகிருந்தும் ஆணவமில்லை
அறிவிருந்தும் அகந்தையில்லை
மொழியிருந்தும் மோகமில்லை
கண்ணீரிலும் கவலையில்லை
சிரிப்பிலே கள்ளமில்லை
உறுதியிலே உறவில்லை
பாசத்திலே நோக்கமில்லை
முகத்திலே பொய்யில்லை
சுகத்திலே பெருமையில்லை
துக்கத்திலும் வருத்தமில்லை
சுற்றமிருந்தும் எதிர்பார்ப்பில்லை
கேட்டவை தட்டவில்லை
கலையிலே காட்டமில்லை
வேள்வியிலே வேதனையில்லை
நெஞ்சிருந்தும் கலக்கமில்லை
மனமிருந்தும் மயங்கவில்லை
காதலிலே காமமில்லை
அன்பிருந்தும் ஏக்கமில்லை
உணர்விருந்தும் வேகமில்லை
மென்மையிலே நடுக்கமில்லை
அணைப்பிலே சுயநலமில்லை
வாழ்விருந்தும் பற்றில்லை
இப்படி வாழ்வை நன்கு புரிந்து எப்பொழுதும் நான் வாழ்வேனா என்று தரையில் மண்டியிட்டு கதறியும்என்னை அந்த இறைவனும் புரிந்து கொள்ளாமல் கைவிட்டுவிட்டானோ?
என் நெஞ்சை யாரோ பிசைவதை போல் இருந்தது.
ஒரு குழந்தையை போல் என்னை பாவித்து என் கையை பிடித்து நடத்தி செல்பவர் யார்?
எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. இறைவன் இருக்கிறானா இல்லையா?
இதற்கு பதிலாக என்னுள்ளிருந்து இந்த வரிகள் எதிரொலித்தன.
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நீ நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
…
ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா
முகத்தை கழுவி வெளியே வந்தேன்.
எனக்கு வாழ்க்கையில் குறிக்கோள் என்று பெரிதாக ஒன்றும் கிடையாது. அதனுடன் போராடுவதும் இல்லை. அதன் போக்கிலே விட்டு விட்டு அனைத்து மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் ஏற்றத்தையும் இறக்கத்தையும் சுகத்தையும் துக்கத்தையும் இகழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் நன்றியுடன் ஏற்றுக் கொள்ள துடிக்கும் ஒரு சராசரி பெண்ணே நான்.
இறக்கும் தருவாயில் கூட பழைய நினைவுகள் என்னை என் சிறு வயது கனவில் வரும் வெள்ளை தேவதை போல காட்டவே விரும்புகிறேன்.
ஆகா! ரொம்பவே என்னைப் பற்றி பேசி விட்டேனோ?
எண்ணங்களுக்கு தான் முடிவேது?
சுயநினைவுக்கு வந்த போதுஎன் வீட்டு ஜன்னலில் அமர்ந்திருந்த புறாக்களையும் அதன் உரையாடல்களையும் அப்பொழுதுதான் பார்த்தேன். ஒரு கவலையும் இல்லாமல் தலையை சாய்த்து இப்படியும் அப்படியும் பார்த்து தன் அலகால் ஒரு ஆண் புறா தன் துணையை அன்பாய் தடவி கொடுத்ததை மெய்மறந்து பார்த்த போது என் மனம் அந்த கள்ளமில்லா அன்பை கண்டு துள்ளிக் குதித்தது.
மனதில் திடீரென்று அன்றொரு நாள் பூங்காவில் கிடைத்த கவிஞனின் கீதையும் என் சங்கல்பமும் நினைவுக்கு வந்தன. அந்த கடைசி ஆறு வரிகளும் ஞாபகத்திற்கு வந்தன.
எத்தனையோ மகான்களும் அறிவாளிகளும் ஆராய்ந்து உரைத்த ஒரு உண்மையை ஒன்றும் அறியாத நான் ஏன் கஷ்டப்பட்டு என் சிறிய அறிவைக் கொண்டு அலச முனைய வேண்டும்?
உணர்வுகளின் போராட்டங்களையும் அதை வெற்றிக் கொள்ளும் ரகசியத்தையும் புரிந்து கொண்டு நான் வாழ விரும்புகிறேன். எனவேஇது அடுத்தவர்களுக்காகவோ என் புலமையை காண்பிப்பதற்கோ அல்லாமல் எனக்காகவே எழுதுவது.
சரி.
என் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு பத்து மணிக்கு மேல் கீதையை திறந்து இரண்டாம் அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தேன். கீதையை இதற்கு முன் ஒன்றிரண்டு முறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் என் மனநிலைக்கேற்பவே அதன் அர்த்தம் மனதில் பதியும்.
திறந்த உடனே தெரிந்த அந்த ஸ்லோகங்களை படித்த போது என்னை யாரோ சாட்டையால் அடித்ததை போல் உணர்ந்தேன்.
வார்த்தைகள் என் மூளையில் விளையாடின. அதன் சாரம் என்னுள்ளே இறங்க எத்தனித்தது.
எனக்கு புரிந்த உண்மையை வைத்து சிந்திக்கிறேன். எழுத தொடங்குகிறேன்.
இதோ படியுங்கள்.
நான் கேட்டேன் -
படைப்பாளியின் அளப்பறிய படைப்பு என்னை மயக்கலாம்
அவன் பெருமையைக் கண்டு பாரே வியக்கலாம்
திரும்பின இடங்களில் எல்லாம் அவனையே பார்க்கலாம்
என் மனதின் பிரதிபிம்பமோ என்றே பிறகு உணரலாம்
அன்பர்களும் எதிரணியில் நின்றால் என் உள்ளம் தாங்குமோ
நெஞ்சு பதைக்க கேட்கிறேன் அவர்களுக்குதான் தீங்கு நேருமோ
என் சுயநலத்தால் பல குடும்பங்கள் தான் கலங்குமோ
சொல் நண்பனே! என் கண்ணீர் நிலைதான் இனி மாறுமோ
கண்ணன் சொன்னான் -
அறிவாளி என்றே உன்னை நான் நினைத்தேன்
சிறந்த போர்வீரன் என்றே பெருமிதமடைந்தேன்
என் உயிர்த் தோழன் என்றே உலகம் உணர செய்தேன்
மனக் குழப்பத்தால் தவிக்கும் உன்னை நான் அணைத்தேன்
என் சிங்கமே! சிலிர்த்துக் கொண்டு எழுந்து கொள்ளடா
அஞ்சா நெஞ்சமாய் உன்னையே நீ புரிந்து கொள்ளடா
பேடித்தன்மை தேவையில்லை என்று உணர்ந்து கொள்ளடா
பலவீனத்தை கிழித்து உரத்த குரலில் கர்ஜித்து கொள்ளடா
தொய்ந்த தோள்களை நிமிர்த்தி நேரே என் முன்னே நில்லடா
வலுவற்ற இதயம் போரில் ஒரு களங்கம் என்றே உணர்ந்து கொள்ளடா
தெளிந்து உன் அன்பை என் கண் கொண்டே சிறிது பாரடா
உன் கண்ணீருக்கு நான் சொல்லும் பதிலைதான் கொஞ்சம் கேளடா
மேலே அவன் சொன்னான் -
எதற்கு நீ வருந்துகிறாய் என்று எனக்கு புரியாமலில்லை
இதற்கு நான் பதில் சொல்லாமல் இருக்க போவதில்லை
நீயும் என் பதிலைக் கேட்டு புரிந்து கொள்ளாமல் இருக்க போவதில்லை
இருந்தும் நீ பேசியதன் உண்மை நான் உணராமலில்லை
உயிர்-உடல் காதலின் வெற்றி தோல்வியால் ஞானியர் வருந்துவதில்லை
எந்தவித துக்கமும் அவர்கள் அருகே நெருங்குவதுமில்லை
என் இந்த முதல் கூற்றை மனதில் நிறுத்தினால் உனக்கும் கவலையில்லை
என் நண்பனே! ஏனோ உன் துன்பம் எனக்கு காண சகிக்கவில்லை
நானும் நீயும் இதற்கு முன் இல்லாமல் இருந்ததில்லை
மனதில் பதிந்தவர்கள் உன்னை விட்டு என்றும் பிரிவதில்லை
அழிவிற்கு பயந்து நீ போரிடாமல் இருப்பதில் எனக்கு விருப்பமில்லை
ஏனெனில் யாரும் இதில் தொலைந்து எங்கும் போவதில்லை
தோழாஉயிர் வாழ உடல் தேவை என்று நீ அறியாமலில்லை
பிறப்பில் இருந்து இறப்பு வரை உடலில் மாற்றங்கள் நிகழாமலில்லை
வாலிபத்தில் யாரும் குழந்தை உருவை தேடி அலைவதில்லை
கடந்து போன வாலிபத்தை முதுமையில் தேடுவதில் ஒரு அர்த்தமுமில்லை
முதுமை உடலிலே இளமையும் தொலைந்து போவதில்லை
உடலின் கடந்து போன பருவங்களை நாம் காண்பதில்லை
இறப்பின் பின் உயிரும் உடலுடன் சேர்ந்து அழிவதில்லை
அழிவற்ற உயிரும் மற்றொரு உடலில் நுழைவதை நாம் அறிவதில்லை
நான் சொன்னதால் எதையும் ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை
இருந்தும் தெரிந்து கொள்உன்னிடம் பொய் கூற எனக்கு அவசியமில்லை
இதை அறிந்த எவனும் இழப்பிற்கு வருந்தி அழுவதில்லை
இருந்தும் இந்த உண்மை பலர் கண்களுக்கு புலப்படுவதில்லை
புலன்களின் ஜாலங்களில் மயங்குவது மனித இயல்பு அல்லவோ
இவை தரும் சுகமும் துக்கமும் நிலையில்லை அல்லவோ
இதற்கு ஆதியும் அந்தமும் உண்டு என்பதை நீ ஏற்பாயல்லவோ
இதை வீரத்துடன் எதிர்கொள்ளவே வேண்டுகிறேன் என்று உனக்கு புரியவில்லையோ
உறுதி கொண்ட மனிதன் எவனோ அவனை நான் நன்றே புகழ்வேன்
சுகம் துக்கம் ஒன்றே என்றிருக்கும் அவனை நன்றே அறிவேன்
கலங்காத வீரன் அவனை எதுவும் தீண்டா என்பதை நன்றே உணர்வேன்
அவனே ஆன்மாவின் அழிவின்மை உணர தகுந்தவன் என்பதை நன்றே உரைப்பேன்
எழுதி முடித்து விட்டு படுக்க சென்றேன். கீதையும் மனதிற்குள் சிறிது இறங்கியது. ஆன்மாவை பற்றி மேலும் படிக்க வேண்டும்.
இதனால் என் வாழ்க்கை தரம் உயருமா?
-- அன்பே சிவம் - பத்மஜா
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=30
- The Prophet, Kahlil Gibran
........
Krishna Govinda Gopal Gaate Raho…
Log kahte hain Bhagvan aate nahin…
Draupadi ki tarah bulaate nahin….
Shabari ki tarah khilaate nahin…
மாறி மாறி இந்த வரிகள் ஒலிக்க, நடன ஒத்திகை செய்து கொண்டிருந்த பெண் அந்த பெரிய கூடத்தில் சலங்கைகள் சிணுங்க உருக்கமான பாவத்துடன் ஆடிக் கொண்டிருந்தாள். ராமாயண சொற்பொழிவு முடிந்து சில நிகழ்ச்சிகளை வைத்திருந்தார்கள். அதில் இதுவும் ஒன்று.
ஓரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சபரியை சிலாகித்து அவள் செய்யும் போதுஅடக்கமாட்டாமல் அழுகை வந்தது.
ராமாயணத்தில் சபரியை எனக்கு மிகவும் பிடிக்கும். என்ன ஒரு அலுக்காதசலிக்காத அன்பை வெளிப்படுத்தியவள்! சுத்தமான அன்புடன் தன் குருவின் வாய்மொழியை நம்பி ஒவ்வொரு நாளும் தன் இறைவனின் வருகைக்காக குடிலை சுத்தமாக்கி, பழங்களை பறித்து, வழியில் அமர்ந்து இறைவன் வருகிறானா என்று வருடக்கணக்கில் காத்தது மட்டுமில்லாமல் ராமரின் வருகையின் போது ஒவ்வொரு பழத்தையும் சுவைத்து பிறகே படைத்த தூய இதயம் கொண்டவள்.
நடனப்பெண்ணே! நடனத்துக்காக பாவங்களை காட்டி அபிநயம் பிடிக்கிறாயா அல்லது உன் மனதில் கண்ணனையும், திரௌபதியையும், சபரியையும் நினைத்துதான் ஆடுகிறாயா? ஆனால் ஒவ்வொரு ஒத்திகை முடிந்த பின்னும் நீ கேலியும் கூத்துமாய் இருக்கிறாயே! என்னால் மட்டும் மனதிலிருந்து பாவங்களை சுலபமாக மாற்ற முடியவில்லையே!
அரண்மணை போன்ற வீட்டில் குளியலறை தேடி ஓடினேன். (அந்த தனித்த இடத்தில் தான் எப்பொழுதும் என் அழுத்தங்களும்அழுகைகளும் தடைகல் ஏதுமின்றி என்னுள்ளிருந்து வெளி வரும்.)
கண்ணிருந்தும் காணவில்லை
வாயிருந்தும் பேசவில்லை
செவியிருந்தும் கேட்கவில்லை
அழகிருந்தும் ஆணவமில்லை
அறிவிருந்தும் அகந்தையில்லை
மொழியிருந்தும் மோகமில்லை
கண்ணீரிலும் கவலையில்லை
சிரிப்பிலே கள்ளமில்லை
உறுதியிலே உறவில்லை
பாசத்திலே நோக்கமில்லை
முகத்திலே பொய்யில்லை
சுகத்திலே பெருமையில்லை
துக்கத்திலும் வருத்தமில்லை
சுற்றமிருந்தும் எதிர்பார்ப்பில்லை
கேட்டவை தட்டவில்லை
கலையிலே காட்டமில்லை
வேள்வியிலே வேதனையில்லை
நெஞ்சிருந்தும் கலக்கமில்லை
மனமிருந்தும் மயங்கவில்லை
காதலிலே காமமில்லை
அன்பிருந்தும் ஏக்கமில்லை
உணர்விருந்தும் வேகமில்லை
மென்மையிலே நடுக்கமில்லை
அணைப்பிலே சுயநலமில்லை
வாழ்விருந்தும் பற்றில்லை
இப்படி வாழ்வை நன்கு புரிந்து எப்பொழுதும் நான் வாழ்வேனா என்று தரையில் மண்டியிட்டு கதறியும்என்னை அந்த இறைவனும் புரிந்து கொள்ளாமல் கைவிட்டுவிட்டானோ?
என் நெஞ்சை யாரோ பிசைவதை போல் இருந்தது.
ஒரு குழந்தையை போல் என்னை பாவித்து என் கையை பிடித்து நடத்தி செல்பவர் யார்?
எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. இறைவன் இருக்கிறானா இல்லையா?
இதற்கு பதிலாக என்னுள்ளிருந்து இந்த வரிகள் எதிரொலித்தன.
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நீ நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
…
ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா
முகத்தை கழுவி வெளியே வந்தேன்.
எனக்கு வாழ்க்கையில் குறிக்கோள் என்று பெரிதாக ஒன்றும் கிடையாது. அதனுடன் போராடுவதும் இல்லை. அதன் போக்கிலே விட்டு விட்டு அனைத்து மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் ஏற்றத்தையும் இறக்கத்தையும் சுகத்தையும் துக்கத்தையும் இகழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் நன்றியுடன் ஏற்றுக் கொள்ள துடிக்கும் ஒரு சராசரி பெண்ணே நான்.
இறக்கும் தருவாயில் கூட பழைய நினைவுகள் என்னை என் சிறு வயது கனவில் வரும் வெள்ளை தேவதை போல காட்டவே விரும்புகிறேன்.
ஆகா! ரொம்பவே என்னைப் பற்றி பேசி விட்டேனோ?
எண்ணங்களுக்கு தான் முடிவேது?
சுயநினைவுக்கு வந்த போதுஎன் வீட்டு ஜன்னலில் அமர்ந்திருந்த புறாக்களையும் அதன் உரையாடல்களையும் அப்பொழுதுதான் பார்த்தேன். ஒரு கவலையும் இல்லாமல் தலையை சாய்த்து இப்படியும் அப்படியும் பார்த்து தன் அலகால் ஒரு ஆண் புறா தன் துணையை அன்பாய் தடவி கொடுத்ததை மெய்மறந்து பார்த்த போது என் மனம் அந்த கள்ளமில்லா அன்பை கண்டு துள்ளிக் குதித்தது.
மனதில் திடீரென்று அன்றொரு நாள் பூங்காவில் கிடைத்த கவிஞனின் கீதையும் என் சங்கல்பமும் நினைவுக்கு வந்தன. அந்த கடைசி ஆறு வரிகளும் ஞாபகத்திற்கு வந்தன.
எத்தனையோ மகான்களும் அறிவாளிகளும் ஆராய்ந்து உரைத்த ஒரு உண்மையை ஒன்றும் அறியாத நான் ஏன் கஷ்டப்பட்டு என் சிறிய அறிவைக் கொண்டு அலச முனைய வேண்டும்?
உணர்வுகளின் போராட்டங்களையும் அதை வெற்றிக் கொள்ளும் ரகசியத்தையும் புரிந்து கொண்டு நான் வாழ விரும்புகிறேன். எனவேஇது அடுத்தவர்களுக்காகவோ என் புலமையை காண்பிப்பதற்கோ அல்லாமல் எனக்காகவே எழுதுவது.
சரி.
என் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு பத்து மணிக்கு மேல் கீதையை திறந்து இரண்டாம் அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தேன். கீதையை இதற்கு முன் ஒன்றிரண்டு முறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் என் மனநிலைக்கேற்பவே அதன் அர்த்தம் மனதில் பதியும்.
திறந்த உடனே தெரிந்த அந்த ஸ்லோகங்களை படித்த போது என்னை யாரோ சாட்டையால் அடித்ததை போல் உணர்ந்தேன்.
வார்த்தைகள் என் மூளையில் விளையாடின. அதன் சாரம் என்னுள்ளே இறங்க எத்தனித்தது.
எனக்கு புரிந்த உண்மையை வைத்து சிந்திக்கிறேன். எழுத தொடங்குகிறேன்.
இதோ படியுங்கள்.
நான் கேட்டேன் -
படைப்பாளியின் அளப்பறிய படைப்பு என்னை மயக்கலாம்
அவன் பெருமையைக் கண்டு பாரே வியக்கலாம்
திரும்பின இடங்களில் எல்லாம் அவனையே பார்க்கலாம்
என் மனதின் பிரதிபிம்பமோ என்றே பிறகு உணரலாம்
அன்பர்களும் எதிரணியில் நின்றால் என் உள்ளம் தாங்குமோ
நெஞ்சு பதைக்க கேட்கிறேன் அவர்களுக்குதான் தீங்கு நேருமோ
என் சுயநலத்தால் பல குடும்பங்கள் தான் கலங்குமோ
சொல் நண்பனே! என் கண்ணீர் நிலைதான் இனி மாறுமோ
கண்ணன் சொன்னான் -
அறிவாளி என்றே உன்னை நான் நினைத்தேன்
சிறந்த போர்வீரன் என்றே பெருமிதமடைந்தேன்
என் உயிர்த் தோழன் என்றே உலகம் உணர செய்தேன்
மனக் குழப்பத்தால் தவிக்கும் உன்னை நான் அணைத்தேன்
என் சிங்கமே! சிலிர்த்துக் கொண்டு எழுந்து கொள்ளடா
அஞ்சா நெஞ்சமாய் உன்னையே நீ புரிந்து கொள்ளடா
பேடித்தன்மை தேவையில்லை என்று உணர்ந்து கொள்ளடா
பலவீனத்தை கிழித்து உரத்த குரலில் கர்ஜித்து கொள்ளடா
தொய்ந்த தோள்களை நிமிர்த்தி நேரே என் முன்னே நில்லடா
வலுவற்ற இதயம் போரில் ஒரு களங்கம் என்றே உணர்ந்து கொள்ளடா
தெளிந்து உன் அன்பை என் கண் கொண்டே சிறிது பாரடா
உன் கண்ணீருக்கு நான் சொல்லும் பதிலைதான் கொஞ்சம் கேளடா
மேலே அவன் சொன்னான் -
எதற்கு நீ வருந்துகிறாய் என்று எனக்கு புரியாமலில்லை
இதற்கு நான் பதில் சொல்லாமல் இருக்க போவதில்லை
நீயும் என் பதிலைக் கேட்டு புரிந்து கொள்ளாமல் இருக்க போவதில்லை
இருந்தும் நீ பேசியதன் உண்மை நான் உணராமலில்லை
உயிர்-உடல் காதலின் வெற்றி தோல்வியால் ஞானியர் வருந்துவதில்லை
எந்தவித துக்கமும் அவர்கள் அருகே நெருங்குவதுமில்லை
என் இந்த முதல் கூற்றை மனதில் நிறுத்தினால் உனக்கும் கவலையில்லை
என் நண்பனே! ஏனோ உன் துன்பம் எனக்கு காண சகிக்கவில்லை
நானும் நீயும் இதற்கு முன் இல்லாமல் இருந்ததில்லை
மனதில் பதிந்தவர்கள் உன்னை விட்டு என்றும் பிரிவதில்லை
அழிவிற்கு பயந்து நீ போரிடாமல் இருப்பதில் எனக்கு விருப்பமில்லை
ஏனெனில் யாரும் இதில் தொலைந்து எங்கும் போவதில்லை
தோழாஉயிர் வாழ உடல் தேவை என்று நீ அறியாமலில்லை
பிறப்பில் இருந்து இறப்பு வரை உடலில் மாற்றங்கள் நிகழாமலில்லை
வாலிபத்தில் யாரும் குழந்தை உருவை தேடி அலைவதில்லை
கடந்து போன வாலிபத்தை முதுமையில் தேடுவதில் ஒரு அர்த்தமுமில்லை
முதுமை உடலிலே இளமையும் தொலைந்து போவதில்லை
உடலின் கடந்து போன பருவங்களை நாம் காண்பதில்லை
இறப்பின் பின் உயிரும் உடலுடன் சேர்ந்து அழிவதில்லை
அழிவற்ற உயிரும் மற்றொரு உடலில் நுழைவதை நாம் அறிவதில்லை
நான் சொன்னதால் எதையும் ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை
இருந்தும் தெரிந்து கொள்உன்னிடம் பொய் கூற எனக்கு அவசியமில்லை
இதை அறிந்த எவனும் இழப்பிற்கு வருந்தி அழுவதில்லை
இருந்தும் இந்த உண்மை பலர் கண்களுக்கு புலப்படுவதில்லை
புலன்களின் ஜாலங்களில் மயங்குவது மனித இயல்பு அல்லவோ
இவை தரும் சுகமும் துக்கமும் நிலையில்லை அல்லவோ
இதற்கு ஆதியும் அந்தமும் உண்டு என்பதை நீ ஏற்பாயல்லவோ
இதை வீரத்துடன் எதிர்கொள்ளவே வேண்டுகிறேன் என்று உனக்கு புரியவில்லையோ
உறுதி கொண்ட மனிதன் எவனோ அவனை நான் நன்றே புகழ்வேன்
சுகம் துக்கம் ஒன்றே என்றிருக்கும் அவனை நன்றே அறிவேன்
கலங்காத வீரன் அவனை எதுவும் தீண்டா என்பதை நன்றே உணர்வேன்
அவனே ஆன்மாவின் அழிவின்மை உணர தகுந்தவன் என்பதை நன்றே உரைப்பேன்
எழுதி முடித்து விட்டு படுக்க சென்றேன். கீதையும் மனதிற்குள் சிறிது இறங்கியது. ஆன்மாவை பற்றி மேலும் படிக்க வேண்டும்.
இதனால் என் வாழ்க்கை தரம் உயருமா?
-- அன்பே சிவம் - பத்மஜா
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=30
கீதை - பத்மஜா - ஒன்று
This earth is higher than all heavens; this is the greatest school in the universe
- Swami Vivekananda
மஞ்சள் பூக்கள் தரையில் கம்பளம் விரித்தது போல் அழகாக சிதறியிருந்தன. மரங்கள் கம்பீரமாக நின்றிருந்தன. நீருண்ட மேகங்கள் சூரியனை மறைத்திருந்தது. பறவைகள் மழை வருமோ என்று கூக்குரலிட்டு கூட்டணி உடையாமல் கூட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தன. இதமான குளிர் காற்று உடலில் ஊடுருவி என்னை சிலிர்க்க வைத்தது. நான் ஒரு மரத்தினடியில் அமர்ந்திருந்தேன்.
சுற்றிப் பார்த்தேன். நேரு பூங்காவிலிருந்து அனைவரும் மழைக்கு பயந்து வேகமாக நடையை கட்டத் துவங்கினர். ‘ரசனை கெட்டவர்கள்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். இயற்கையை ரசிக்க வேண்டும் என்றால் என்னை கேளுங்கள்.
மேலே அண்ணாந்து பார்த்தேன். எத்தனை நாட்கள் என் சிறு வயதில் வானத்தைப் பார்த்திருப்பேன். தனிமை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் இயற்கையை காண நான் சலித்ததே இல்லை. மணிக்கணக்கில் உட்காருவதற்கு கூட எனக்கு ஆட்சேபணை இல்லை. ஏன் இன்னும் கூட நான் அப்படிதான். எனக்கு துணை வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. என் தனி உலகில் யாருக்கும் தெரியாமல் சஞ்சாரித்துக் கொண்டிருப்பேன்.
சிறு வயதில் அம்மாவின் கதைப்படி தேவர்களும் தேவதைகளும் வானத்திலே தெரிகின்றனரா அல்லது நிற்கின்றனரா என்று பார்த்த நாட்கள் எத்தனை எத்தனை. இன்னும் சொல்லப் போனால் திரிசங்கு சொர்க்கம் எங்கே இருக்கும் என்று கூட மேலே பார்த்து வியந்திருக்கிறேன். மழை பெய்யும் நேரத்தில் ‘அந்த தேவர்கள் மழையில் நனைந்தால் என்ன செய்வார்கள். நம்மை போல வீடு கூட அவர்களுக்கு இல்லையேஎன்று மிகவும் வருந்தியிருக்கிறேன் என் ஏழு வயதில். இப்பொழுது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது என்னையே நினைத்து. நீங்களும் சிரிக்கிறீர்களா? உங்களுக்குள்ளும் இன்னும் குழந்தைத்தனம் ஒளிந்திருக்கிறதுதானே?
வானமும் கடலும் அதன் நீல நிறமும் என்னை எப்பொழுதும் பரவசப்படுத்தும். இன்னும் சொல்ல போனால் ‘ராமன் எஃபெக்ட்’ படிக்கும் போது என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
எதிரே ஒரு சிறுவன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் நான் பார்த்த திரைபடம் மங்கலாக ஞாபகத்துக்கு வந்தது. நான் இரண்டாவதோ மூன்றாவதோ படித்துக் கொண்டிருந்த போது எங்கள் பள்ளியில் அந்த திரைபடத்திற்கு அழைத்து சென்றனர். கதை இப்படி போகும்.
பத்து வயது ஏழை சிறுவன் அவன். தாய் தந்தை இல்லாதவன். சாப்பிட கூட அவனுக்கு ஒன்றும் கிடைக்காது. பல இடங்களில் வீட்டு வேலை செய்வான். இடிசொற்களையும் கேட்பான். அவனுக்கு ஓவியம் இயற்கையாகவே வரைய வரும். பார்க்கும் சுவர்களில் எல்லாம் கரிக்கட்டையால் வரைந்து வைப்பான். பலர் அவனைத் திட்டுவர் அவர்கள் வீட்டு சுவற்றை அசுத்தப்படுத்துவதாக. யாரோ ஒருவர் முடிவில் அவன் கலையை மதித்து உயர்த்துவார். இதற்கிடையில் அந்த குழந்தை தாயை நினைத்து ஏங்கும். ஒரு சிலையின் முன் நின்று அழுவான். ஒரு நாள் ஒரு தேவதை வானத்தில் இருந்து இறங்கி வந்து கட்டியணைத்து முத்தம் கொடுப்பாள்.
இந்த பிச்சையெடுக்கும் பையன் வாழ்வில் உயர்வானா மாட்டானா? யாரிடம் கேட்பது? இவன் பின்னே அன்பு காட்ட யாராவது இருக்கிறார்களா இல்லையா? கேட்கலாமா என்று கூட தோன்றியது. இல்லை என்றால் என் அடுத்த நடவடிக்கை என்ன என்று எனக்கே புரியவில்லை.
சிறு வயதில் என்னை பாதித்த படம் இப்பொழுது நினைத்தாலும் என் கண்களில் நீரை வரவழைத்தது. எத்தனை இரவுகள் அந்த குழந்தையின் கஷ்டத்தை நினைத்து அழுதிருப்பேன். எத்தனை முறைஎத்தனை நாட்கள் வானத்தை பார்த்து “தேவதையே! நீ படத்தில் வந்ததை போல வாயேன்” என்று காத்திருப்பேன். என்ன பேதைமை இது என்று கூட புரியாத வயது எனக்கு. இல்லை என்னொத்த நண்பர்கள் என்னை போல் கூட்டிற்குள் இருந்ததில்லை. நான் மக்காகதான் இருக்க வேண்டும்.
சுய நினைவுக்கு வந்தேன். மழை தூர தொடங்கியது. துக்கங்களை எல்லாம் கரைத்து சிரிக்க வேண்டும் போல் இருந்தது. கை கட்டிக் கொண்டு மெல்ல நனைந்து கொண்டே நடக்க வேண்டும் போல் இருந்தது. ஒரு கவிதையை எழுத முயற்சி செய்யலாம் போல் தோன்றியது. யாராவது என்னையும் என் ரசனையையும் புரிந்து கொள்ள மாட்டார்களா என்று தோன்றியது. இந்த உலகை விட்டு மறைந்து விட வேண்டும் போல் இருந்தது. இறந்தபின் என்னாகும் என்றும் எண்ணத் தூண்டியது. என்னானால் என்னஇன்றைய வாழ்வே நித்தியம் என்றும் யாரோ மண்டையில் அடித்தது போல் இருந்தது.
கண்ணை ஓட்டினேன். அமர்ந்திருந்த ஒரு சிலரும் ஒதுக்குபுறத்தைத் தேடி ஓடி கொண்டிருந்தனர். தன் உடலுக்கும் உணர்வுகளுக்கும் கொடுக்கும் மதிப்பு அடுத்தவர் உள்ளத்திற்கும் இதே போல இவர்கள் கொடுப்பார்களா என்று அவர்களை உலுப்பி கேட்கலாமோ என்று கூட தோன்றியது.
முதல் தூரலில் எழுந்த மண்வாசனையை ரசித்தேன். ஆகா! எத்தனை உணர்ச்சி பொங்க பூமியும் மழையை வரவேற்கிறது நறுமணத்துடன். செடிகள்மரங்கள் அனைத்தும் தான் நனைந்து விட்ட சந்தோஷத்தில்தன்னை தழுவி ஆரோகணித்த மழைக்காக இடதும் வலதுமாக அசைந்து சந்தோஷமாக கையாட்டின. பூக்களின் மேலும் இலையின் மேலும் தேங்கியிருந்த ஒரு சில துளிகள் ‘நாங்கள் அழவில்லைஇது ஆனந்த கண்ணீரேஎன்று அழகாய் சொல்வது போல் இருந்தது.
எனக்கு பூக்களையோ இலையையோ தேவையில்லாமல் பறிக்க மனம் வராது. அதற்கு வலிக்குமோ என்ற பயம்தான். அப்படியே பறித்தாலும் மனதிலே மன்னிப்பையும் உத்தரவையும் கேட்டே பறிப்பேன். மறுபடியும் சிரிக்கிறீர்களா! என்னை இந்த வயதில் மாற்றிக் கொள்ள முடியாது. இப்படியே இருந்து விட்டு போகிறேனே.
சிதறியிருந்த பூக்களை ஒவ்வொன்றாக பொறுக்கி மடியில் வைத்துக் கொண்டேன். யாராவது கால்பட்டு அது மிதிபட வேண்டாமே. மரத்தில் இருந்து சில பறவைகள் என்னை கூவி அழைப்பதைப் போல் இருந்தது. என்னதான் பேசிக் கொள்வார்கள் என்று ஒரு நிமிடம் மேலே பார்த்து வியந்து நடக்க எத்தனித்த போதுகாலில் ஏதோ ஒரு தாள் தட்டுபட்டது. யாரோ வேர்கடலை சாப்பிட்டு அதை குப்பைத் தொட்டியில் போடாமல் அப்படியே கீழே போட்டிருந்தார்கள்.
எனக்கும் ஒரு பழக்கம். இந்த மாதிரி ஏதாவது கிடைத்தால்அதில் என்னதான் எழுதியிருக்கிறது என்று படிக்க மனம் பரபரக்கும். சில சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. அப்படி இதை பிரித்து பார்த்த போது துணுக்குற்றேன்.
யாரோ ஒரு வளரும் கலைஞனின் வண்ணப் படைப்பாக இருந்தது. குண்டு குண்டான கையெழுத்தில் கீதையின் முன்கதை சுருக்கத்தை எழுத முயன்றிருந்தான். எப்படி இது பொட்டலம் கட்ட வந்தது என்று தெரியவில்லை. அந்த தாளில் பாதியிலிருந்து தான் இருந்தது. இதோ படிக்கிறேன் கேளுங்கள்.
இவ்வாறு பங்கு சண்டையில் இரு சகோதரர்கள் போர் முழக்கமிட்டாரே
அந்தகன் திருதிராட்டினன் உண்மை சாராமல் வாய்மூடி மௌனி ஆனாரே
கண்ணனின் தூது அனைத்தும் பயனின்றிதான் போனதே
‘நானா என் சேனையா’ என்றே அவனும் வினவினானே
முட்டாள் துரியோதனன் ‘சேனையே’ என்று வெற்றிக் களிப்பில் சிரித்தானே
கண்ணனும் அர்ச்சுனன் வேண்டுகோளுக்கிணங்க தேரோட்டியாக மாறினானே
பீஷ்மரும் துரோணரும் எதிர் அணியில் வில்லேந்தி நின்றனரே
இரு அணியினரும் அழிவை எதிர்நோக்கி அணிவகுத்தனரே
தேரை இரு அணிகளுக்கிடையில் நிறுத்துமாறு பார்த்தன் வேண்டினானே
பாட்டனாரையும் குருவையும் எதிரணியில் கண்டு கலங்கினானே
போரைக் கண்டு அஞ்சாத வீரன் அர்ச்சுனனே
உணர்வுகளின் பிடியில் சிக்கி தவிக்கும் பாமரன் ஆனானே
கண்களில் நீர் வடிய உடலும் உள்ளமும் பதைபதைக்க நின்றானே
நியாயங்கள் பல பேசி போர் செய்ய வேண்டாம் என்றானே
இனி நான் போரிட போவதில்லை என்று காண்டீபத்தை கீழே வைத்தானே
நண்பனின் பலவீனம் கண்டு கண்ணன் உண்மையை உணர்த்தவே முயன்றானே
‘இவர்களை கொன்று கிடைக்கும் அரியாசணை தேவையில்லை’ என்று அர்ச்சுனன் கதறினானே
பிறகு முடிவாக ‘என் கடமையை பற்றி சொல்’ என்று சீடனாகி கண்ணனிடம் கேட்டானே
சிரித்த முகமுடையோன் உபதேசம் வேண்டிய பார்த்தனுக்காக தர்மத்தின் கீதம் பாடினானே
அப்பாட்டின் இனிமையை வியாச பகவானும் நமக்காக எழுதி வைத்தாரே
அதை பல முறை படித்த பின்னும் எட்டாத என் மூளையில் கண்ணனே வந்து குட்டினானே
வியந்து நிமிர்ந்து பார்த்து எழுந்த என்னை அமர செய்து கன்னத்தில் அன்பாய் தட்டினானே
அந்த தட்டலில் கரைந்து நனைந்து பெருகிய என் கண்ணீரை அவனும் நோக்கினானே
நீ அதிசய மனிதன் என்று நினைத்தது என் தவறே என்று போக எத்தனித்தானே
உன்னை ஆசானாய் ஏற்றும் நீ காட்டும் அன்பு இவ்வளவோ என்று நானும் கலங்கி கேட்டேனே
அவனும் உடனே மனமிளகி என்னருகில் வந்தமர்ந்து இவ்வாறு மொழிந்தானே
கீதையே இங்குதான் ஆரம்பிக்கிறதல்லவோ? இதற்கு பிறகு என்ன எழுதியிருப்பான்? கடைசி ஆறு வரிகளை மறுபடியும் படித்தேன். அந்த கவிஞனின் தவிப்பு எனக்கு கொஞ்சம் புரிவதாக இருந்தது. இப்படி ஒரு அன்பான தோழனும் ஆசானும் கிடைப்பார்களா தெரியவில்லை என்று நினைத்தேன்.
மழை நின்று சூரியன் தன் சாயங்கால மஞ்சள் வெய்யிலை காட்ட எத்தனித்தான். அழகிய வானவில்லை வானத்தில் கண்டு குதூகலித்தேன். எத்தனை நிறங்கள் வெளிபடுகிறது ஒரு வெள்ளை நிறத்திலிருந்து. மனிதனும் அப்படிதானோ! பல நேரங்களில் பல முகங்களை காண்பிக்கிறானே இவன். இருந்தாலும் வானவில்லிற்கு இருக்கும் அழகு இவனுக்கு இல்லை. ஏன் அப்படி? மனிதன் பல முகங்களை கொண்ட ஒரு அபூர்வ பிறவியே.
சரிநேரமாகி விட்டது. நடப்போம் என்று நினைத்து வீட்டை நோக்கி நடக்க துவங்கினேன். கையில் இருந்த கவிதை என்னை உறுத்தியது. அதை தூக்கியெறிய மனம் வரவில்லை. நாமே இதை தொடர்ந்து முயன்றாலென்ன என்று மின்னலைப் போல ஒரு எண்ணம் வந்தது.
முயன்றுதான் பார்ப்போமே என்று நினைத்த கணத்திலேயே வாழ்வில் ஒரு புது அர்த்தம் கிடைத்தது போல் உணர்ந்தேன்.
இந்த மாதிரி நேரங்களில் எதையாவது படித்தால் தேவலை போல் இருந்ததால் என் கைப்பையில் இருந்த கீதாஞ்சலியை எடுத்தேன். எப்பொழுதும் போல தாகூரின் சிலிர்க்க வைக்கும் இந்த வரிகள் இன்றும் ஏனோ என் மனதில் என்னவோ செய்தன.
Pluck this little flower and take it, delay not! I fear lest it droop and drop into the dust.
I may not find a place in thy garland, but honour it with a touch of pain from thy hand and pluck it. I fear lest the day end before I am aware, and the time of offering go by.
Though its colour be not deep and its smell be faint, use this flower in thy service and pluck it while there is time.[/size]
மறுபடியும் மறுபடியும் படிக்க தூண்டும் வரிகள். என்ன கற்பனைஎத்தனை மென்மை இந்த வரிகளில்! இதை விட அழகாக யாரால் சொல்ல முடியுமா என்ன?
தாடி கவிஞரே! உன்னை உன் எழுத்துகளுக்காகவே மிகவும் நேசிக்கிறேன். எங்கே இருக்கிறாய் நீ?
வானத்தை பார்த்தும் எப்பொழுதும் போல் பதில் கிடைக்காதலால் மனதிற்குள் சிரித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன்.
-- அன்பே சிவம் - பத்மஜா
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=30
- Swami Vivekananda
மஞ்சள் பூக்கள் தரையில் கம்பளம் விரித்தது போல் அழகாக சிதறியிருந்தன. மரங்கள் கம்பீரமாக நின்றிருந்தன. நீருண்ட மேகங்கள் சூரியனை மறைத்திருந்தது. பறவைகள் மழை வருமோ என்று கூக்குரலிட்டு கூட்டணி உடையாமல் கூட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தன. இதமான குளிர் காற்று உடலில் ஊடுருவி என்னை சிலிர்க்க வைத்தது. நான் ஒரு மரத்தினடியில் அமர்ந்திருந்தேன்.
சுற்றிப் பார்த்தேன். நேரு பூங்காவிலிருந்து அனைவரும் மழைக்கு பயந்து வேகமாக நடையை கட்டத் துவங்கினர். ‘ரசனை கெட்டவர்கள்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். இயற்கையை ரசிக்க வேண்டும் என்றால் என்னை கேளுங்கள்.
மேலே அண்ணாந்து பார்த்தேன். எத்தனை நாட்கள் என் சிறு வயதில் வானத்தைப் பார்த்திருப்பேன். தனிமை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் இயற்கையை காண நான் சலித்ததே இல்லை. மணிக்கணக்கில் உட்காருவதற்கு கூட எனக்கு ஆட்சேபணை இல்லை. ஏன் இன்னும் கூட நான் அப்படிதான். எனக்கு துணை வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. என் தனி உலகில் யாருக்கும் தெரியாமல் சஞ்சாரித்துக் கொண்டிருப்பேன்.
சிறு வயதில் அம்மாவின் கதைப்படி தேவர்களும் தேவதைகளும் வானத்திலே தெரிகின்றனரா அல்லது நிற்கின்றனரா என்று பார்த்த நாட்கள் எத்தனை எத்தனை. இன்னும் சொல்லப் போனால் திரிசங்கு சொர்க்கம் எங்கே இருக்கும் என்று கூட மேலே பார்த்து வியந்திருக்கிறேன். மழை பெய்யும் நேரத்தில் ‘அந்த தேவர்கள் மழையில் நனைந்தால் என்ன செய்வார்கள். நம்மை போல வீடு கூட அவர்களுக்கு இல்லையேஎன்று மிகவும் வருந்தியிருக்கிறேன் என் ஏழு வயதில். இப்பொழுது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது என்னையே நினைத்து. நீங்களும் சிரிக்கிறீர்களா? உங்களுக்குள்ளும் இன்னும் குழந்தைத்தனம் ஒளிந்திருக்கிறதுதானே?
வானமும் கடலும் அதன் நீல நிறமும் என்னை எப்பொழுதும் பரவசப்படுத்தும். இன்னும் சொல்ல போனால் ‘ராமன் எஃபெக்ட்’ படிக்கும் போது என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
எதிரே ஒரு சிறுவன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் நான் பார்த்த திரைபடம் மங்கலாக ஞாபகத்துக்கு வந்தது. நான் இரண்டாவதோ மூன்றாவதோ படித்துக் கொண்டிருந்த போது எங்கள் பள்ளியில் அந்த திரைபடத்திற்கு அழைத்து சென்றனர். கதை இப்படி போகும்.
பத்து வயது ஏழை சிறுவன் அவன். தாய் தந்தை இல்லாதவன். சாப்பிட கூட அவனுக்கு ஒன்றும் கிடைக்காது. பல இடங்களில் வீட்டு வேலை செய்வான். இடிசொற்களையும் கேட்பான். அவனுக்கு ஓவியம் இயற்கையாகவே வரைய வரும். பார்க்கும் சுவர்களில் எல்லாம் கரிக்கட்டையால் வரைந்து வைப்பான். பலர் அவனைத் திட்டுவர் அவர்கள் வீட்டு சுவற்றை அசுத்தப்படுத்துவதாக. யாரோ ஒருவர் முடிவில் அவன் கலையை மதித்து உயர்த்துவார். இதற்கிடையில் அந்த குழந்தை தாயை நினைத்து ஏங்கும். ஒரு சிலையின் முன் நின்று அழுவான். ஒரு நாள் ஒரு தேவதை வானத்தில் இருந்து இறங்கி வந்து கட்டியணைத்து முத்தம் கொடுப்பாள்.
இந்த பிச்சையெடுக்கும் பையன் வாழ்வில் உயர்வானா மாட்டானா? யாரிடம் கேட்பது? இவன் பின்னே அன்பு காட்ட யாராவது இருக்கிறார்களா இல்லையா? கேட்கலாமா என்று கூட தோன்றியது. இல்லை என்றால் என் அடுத்த நடவடிக்கை என்ன என்று எனக்கே புரியவில்லை.
சிறு வயதில் என்னை பாதித்த படம் இப்பொழுது நினைத்தாலும் என் கண்களில் நீரை வரவழைத்தது. எத்தனை இரவுகள் அந்த குழந்தையின் கஷ்டத்தை நினைத்து அழுதிருப்பேன். எத்தனை முறைஎத்தனை நாட்கள் வானத்தை பார்த்து “தேவதையே! நீ படத்தில் வந்ததை போல வாயேன்” என்று காத்திருப்பேன். என்ன பேதைமை இது என்று கூட புரியாத வயது எனக்கு. இல்லை என்னொத்த நண்பர்கள் என்னை போல் கூட்டிற்குள் இருந்ததில்லை. நான் மக்காகதான் இருக்க வேண்டும்.
சுய நினைவுக்கு வந்தேன். மழை தூர தொடங்கியது. துக்கங்களை எல்லாம் கரைத்து சிரிக்க வேண்டும் போல் இருந்தது. கை கட்டிக் கொண்டு மெல்ல நனைந்து கொண்டே நடக்க வேண்டும் போல் இருந்தது. ஒரு கவிதையை எழுத முயற்சி செய்யலாம் போல் தோன்றியது. யாராவது என்னையும் என் ரசனையையும் புரிந்து கொள்ள மாட்டார்களா என்று தோன்றியது. இந்த உலகை விட்டு மறைந்து விட வேண்டும் போல் இருந்தது. இறந்தபின் என்னாகும் என்றும் எண்ணத் தூண்டியது. என்னானால் என்னஇன்றைய வாழ்வே நித்தியம் என்றும் யாரோ மண்டையில் அடித்தது போல் இருந்தது.
கண்ணை ஓட்டினேன். அமர்ந்திருந்த ஒரு சிலரும் ஒதுக்குபுறத்தைத் தேடி ஓடி கொண்டிருந்தனர். தன் உடலுக்கும் உணர்வுகளுக்கும் கொடுக்கும் மதிப்பு அடுத்தவர் உள்ளத்திற்கும் இதே போல இவர்கள் கொடுப்பார்களா என்று அவர்களை உலுப்பி கேட்கலாமோ என்று கூட தோன்றியது.
முதல் தூரலில் எழுந்த மண்வாசனையை ரசித்தேன். ஆகா! எத்தனை உணர்ச்சி பொங்க பூமியும் மழையை வரவேற்கிறது நறுமணத்துடன். செடிகள்மரங்கள் அனைத்தும் தான் நனைந்து விட்ட சந்தோஷத்தில்தன்னை தழுவி ஆரோகணித்த மழைக்காக இடதும் வலதுமாக அசைந்து சந்தோஷமாக கையாட்டின. பூக்களின் மேலும் இலையின் மேலும் தேங்கியிருந்த ஒரு சில துளிகள் ‘நாங்கள் அழவில்லைஇது ஆனந்த கண்ணீரேஎன்று அழகாய் சொல்வது போல் இருந்தது.
எனக்கு பூக்களையோ இலையையோ தேவையில்லாமல் பறிக்க மனம் வராது. அதற்கு வலிக்குமோ என்ற பயம்தான். அப்படியே பறித்தாலும் மனதிலே மன்னிப்பையும் உத்தரவையும் கேட்டே பறிப்பேன். மறுபடியும் சிரிக்கிறீர்களா! என்னை இந்த வயதில் மாற்றிக் கொள்ள முடியாது. இப்படியே இருந்து விட்டு போகிறேனே.
சிதறியிருந்த பூக்களை ஒவ்வொன்றாக பொறுக்கி மடியில் வைத்துக் கொண்டேன். யாராவது கால்பட்டு அது மிதிபட வேண்டாமே. மரத்தில் இருந்து சில பறவைகள் என்னை கூவி அழைப்பதைப் போல் இருந்தது. என்னதான் பேசிக் கொள்வார்கள் என்று ஒரு நிமிடம் மேலே பார்த்து வியந்து நடக்க எத்தனித்த போதுகாலில் ஏதோ ஒரு தாள் தட்டுபட்டது. யாரோ வேர்கடலை சாப்பிட்டு அதை குப்பைத் தொட்டியில் போடாமல் அப்படியே கீழே போட்டிருந்தார்கள்.
எனக்கும் ஒரு பழக்கம். இந்த மாதிரி ஏதாவது கிடைத்தால்அதில் என்னதான் எழுதியிருக்கிறது என்று படிக்க மனம் பரபரக்கும். சில சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. அப்படி இதை பிரித்து பார்த்த போது துணுக்குற்றேன்.
யாரோ ஒரு வளரும் கலைஞனின் வண்ணப் படைப்பாக இருந்தது. குண்டு குண்டான கையெழுத்தில் கீதையின் முன்கதை சுருக்கத்தை எழுத முயன்றிருந்தான். எப்படி இது பொட்டலம் கட்ட வந்தது என்று தெரியவில்லை. அந்த தாளில் பாதியிலிருந்து தான் இருந்தது. இதோ படிக்கிறேன் கேளுங்கள்.
இவ்வாறு பங்கு சண்டையில் இரு சகோதரர்கள் போர் முழக்கமிட்டாரே
அந்தகன் திருதிராட்டினன் உண்மை சாராமல் வாய்மூடி மௌனி ஆனாரே
கண்ணனின் தூது அனைத்தும் பயனின்றிதான் போனதே
‘நானா என் சேனையா’ என்றே அவனும் வினவினானே
முட்டாள் துரியோதனன் ‘சேனையே’ என்று வெற்றிக் களிப்பில் சிரித்தானே
கண்ணனும் அர்ச்சுனன் வேண்டுகோளுக்கிணங்க தேரோட்டியாக மாறினானே
பீஷ்மரும் துரோணரும் எதிர் அணியில் வில்லேந்தி நின்றனரே
இரு அணியினரும் அழிவை எதிர்நோக்கி அணிவகுத்தனரே
தேரை இரு அணிகளுக்கிடையில் நிறுத்துமாறு பார்த்தன் வேண்டினானே
பாட்டனாரையும் குருவையும் எதிரணியில் கண்டு கலங்கினானே
போரைக் கண்டு அஞ்சாத வீரன் அர்ச்சுனனே
உணர்வுகளின் பிடியில் சிக்கி தவிக்கும் பாமரன் ஆனானே
கண்களில் நீர் வடிய உடலும் உள்ளமும் பதைபதைக்க நின்றானே
நியாயங்கள் பல பேசி போர் செய்ய வேண்டாம் என்றானே
இனி நான் போரிட போவதில்லை என்று காண்டீபத்தை கீழே வைத்தானே
நண்பனின் பலவீனம் கண்டு கண்ணன் உண்மையை உணர்த்தவே முயன்றானே
‘இவர்களை கொன்று கிடைக்கும் அரியாசணை தேவையில்லை’ என்று அர்ச்சுனன் கதறினானே
பிறகு முடிவாக ‘என் கடமையை பற்றி சொல்’ என்று சீடனாகி கண்ணனிடம் கேட்டானே
சிரித்த முகமுடையோன் உபதேசம் வேண்டிய பார்த்தனுக்காக தர்மத்தின் கீதம் பாடினானே
அப்பாட்டின் இனிமையை வியாச பகவானும் நமக்காக எழுதி வைத்தாரே
அதை பல முறை படித்த பின்னும் எட்டாத என் மூளையில் கண்ணனே வந்து குட்டினானே
வியந்து நிமிர்ந்து பார்த்து எழுந்த என்னை அமர செய்து கன்னத்தில் அன்பாய் தட்டினானே
அந்த தட்டலில் கரைந்து நனைந்து பெருகிய என் கண்ணீரை அவனும் நோக்கினானே
நீ அதிசய மனிதன் என்று நினைத்தது என் தவறே என்று போக எத்தனித்தானே
உன்னை ஆசானாய் ஏற்றும் நீ காட்டும் அன்பு இவ்வளவோ என்று நானும் கலங்கி கேட்டேனே
அவனும் உடனே மனமிளகி என்னருகில் வந்தமர்ந்து இவ்வாறு மொழிந்தானே
கீதையே இங்குதான் ஆரம்பிக்கிறதல்லவோ? இதற்கு பிறகு என்ன எழுதியிருப்பான்? கடைசி ஆறு வரிகளை மறுபடியும் படித்தேன். அந்த கவிஞனின் தவிப்பு எனக்கு கொஞ்சம் புரிவதாக இருந்தது. இப்படி ஒரு அன்பான தோழனும் ஆசானும் கிடைப்பார்களா தெரியவில்லை என்று நினைத்தேன்.
மழை நின்று சூரியன் தன் சாயங்கால மஞ்சள் வெய்யிலை காட்ட எத்தனித்தான். அழகிய வானவில்லை வானத்தில் கண்டு குதூகலித்தேன். எத்தனை நிறங்கள் வெளிபடுகிறது ஒரு வெள்ளை நிறத்திலிருந்து. மனிதனும் அப்படிதானோ! பல நேரங்களில் பல முகங்களை காண்பிக்கிறானே இவன். இருந்தாலும் வானவில்லிற்கு இருக்கும் அழகு இவனுக்கு இல்லை. ஏன் அப்படி? மனிதன் பல முகங்களை கொண்ட ஒரு அபூர்வ பிறவியே.
சரிநேரமாகி விட்டது. நடப்போம் என்று நினைத்து வீட்டை நோக்கி நடக்க துவங்கினேன். கையில் இருந்த கவிதை என்னை உறுத்தியது. அதை தூக்கியெறிய மனம் வரவில்லை. நாமே இதை தொடர்ந்து முயன்றாலென்ன என்று மின்னலைப் போல ஒரு எண்ணம் வந்தது.
முயன்றுதான் பார்ப்போமே என்று நினைத்த கணத்திலேயே வாழ்வில் ஒரு புது அர்த்தம் கிடைத்தது போல் உணர்ந்தேன்.
இந்த மாதிரி நேரங்களில் எதையாவது படித்தால் தேவலை போல் இருந்ததால் என் கைப்பையில் இருந்த கீதாஞ்சலியை எடுத்தேன். எப்பொழுதும் போல தாகூரின் சிலிர்க்க வைக்கும் இந்த வரிகள் இன்றும் ஏனோ என் மனதில் என்னவோ செய்தன.
Pluck this little flower and take it, delay not! I fear lest it droop and drop into the dust.
I may not find a place in thy garland, but honour it with a touch of pain from thy hand and pluck it. I fear lest the day end before I am aware, and the time of offering go by.
Though its colour be not deep and its smell be faint, use this flower in thy service and pluck it while there is time.[/size]
மறுபடியும் மறுபடியும் படிக்க தூண்டும் வரிகள். என்ன கற்பனைஎத்தனை மென்மை இந்த வரிகளில்! இதை விட அழகாக யாரால் சொல்ல முடியுமா என்ன?
தாடி கவிஞரே! உன்னை உன் எழுத்துகளுக்காகவே மிகவும் நேசிக்கிறேன். எங்கே இருக்கிறாய் நீ?
வானத்தை பார்த்தும் எப்பொழுதும் போல் பதில் கிடைக்காதலால் மனதிற்குள் சிரித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன்.
-- அன்பே சிவம் - பத்மஜா
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=30
கீதை பத்மஜா- மகாபாரதத்தின் சில முக்கிய கதாபாத்திரங்கள்
கீதை மகாபாரதத்தின் அங்கமாதலால், அதிலுள்ள
முக்கிய கதாபாத்திரங்களைப் பற்றி மனதில் அலசிய போது சிலர் என்னை எழுத தூண்டினர். அந்த எண்ணங்களின் வெளிபாடே இந்த முயற்சி.
பீஷ்மர்
தந்தையின் ஆசைக்காக தூது சென்றவர்
அரியணை தேவையில்லை என்று உதறித் தள்ளியவர்
திருமணம் வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்தவர்
ஹஸ்தினாபுரத்தை காப்பதே தன் கடமை என்றிருந்தவர்
கங்கையின் புத்திரன் என்ற சிறப்பு பெற்றவர்
பாகுபாடு தெரியாத வெள்ளை உள்ளம் கொண்டவர்
வீரத்திலே சிங்கத்தையும் மிஞ்சும் பெருமையுடையவர்
தேவவிரதன் என்ற இயற்பெயர் உடையவர்
பீஷ்மஎன்று தேவர்களாலும் புகழப் பெற்றவர்
இறப்பு அவர் விரும்பினாலன்றி தொட முடியாத வரம் பெற்றவர்
அம்பையின் காதல் தோல்வி காரணத்தால் சாபமும் பெற்றவர்
ஆதியில் இருந்து அந்தம் வரை மஹாபாரத கதையில் வாழ்ந்தவர்
கடமை உணர்ச்சியில் எடுத்துக் காட்டாக திகழ்ந்தவர்
கண்ண பரமாத்மாவால் மகான் என்று போற்றப்பட்டவர்
பாசப் பேரனான அர்ஜுனனால் அம்பு படுக்கையில் வீழ்ந்தவர்
பகவானை முன் நிறுத்தி அவன் துதி பாடியவர்
இறக்கும் தருவாயிலும் தருமனுக்கு உபதேசித்தவர்
அம்பு படுக்கையில் படுத்தும் கண்ணன் கருணையால் வலி தெரியாதவர்
உத்தராயணத்திற்காக காத்திருந்து இறுதி மூச்சை விட்ட உத்தம புருஷர்
துரோணர்
குச்சிகளை மந்திரத்தின் உதவிக் கொண்டு அடுக்கி பந்தை கிணற்றிலிருந்து எடுத்து பீஷ்மரை அசத்தியவர்
பீஷ்மரால் குரு வம்சத்தின் ஆசானாக நியமிக்கப்பட்டவர்
அஸ்வத்தாமன் என்ற அசகாய சூரனை ஈன்றெடுத்தவர்
திருதிராட்டினன் பாண்டு புத்திரர்களுக்கு குருவாய் பேதமின்றி கற்பித்தவர்
அர்ச்சுனன் பாலும் அவன் திறமையின் மேலும் தனி அன்பை வைத்திருந்தவர்
ஏகலைவன் என்ற இவரது சீடனின் கட்டைவிரலை குருதட்சணையாக கேட்டவர்
என்றும் தன் கடமையையே செய்து வந்த பிராமணர் இவர்
கண்ணனின் சூழ்ச்சியால் அனைத்தையும் விட்டுவிட்டு போர்க்களத்திலேயே உயிரை விட்டவர்
திருதிராட்டினன்
கண்ணின்றி அரசாண்டாலும் அகக்கண்ணையும் தொலைத்தவர்
வார்த்தையில் இனிமையும் மனதில் வன்மமும் பாண்டவர்களுக்காக வைத்திருந்தவர்
காந்தாரி என்ற உத்தமியை மனைவியாக கொண்டவர்
துரியோதனன் துச்சாதனன் என்று நூறு குழந்தைகளின் தந்தையிவர்
பிள்ளை பாசத்தால் பாஞ்சாலியின் மானபங்க நேரத்திலும் மௌனம் சாதித்தவர்
போர் அறிவிப்பின் போதிலும் பிள்ளை சொல் கேட்டு அதர்மத்தை சார்ந்து நின்றவர்
இத்தனை இருந்தும் ஞானக்கண் கொண்டு போரைக் காண வியாசரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்
அதை ஏற்க மனமின்றி சஞ்சயனுக்கு அகக்கண் கொடுக்க செய்து பாரத போரைப் பற்றி தெரிந்து கொண்டவர்
போரிலே அனைவரையும் இழந்து முடிவில் காட்டில் தவம் செய்து உயிரை விட்டவர்.
கண்ணன்
ரோஹிணி நட்சத்திரத்திலே பிறந்த அவதாரமவன்
கருநீல நிறத்தை பூண்டு சிறையில் பிறந்தவன்
தேவகி வசுதேவரை பெற்றோராய் ஏற்றவன்
இருப்பினும் வேறு தாய் தந்தையரை தேடி ஓடியவன்
பிருந்தாவனத்தில் கெஞ்சி கொஞ்சும் செல்லம் அவன்
யசோதையை அன்பினால் ஆட்டிப் படைத்தவன்
கோபியர்களை மயக்கி தன்வசம் இழக்கவைத்த அழகன்
ராதையின் காதலில் நனைந்து அடிபணிந்தவன்
தன் அட்டூழிய மாமன் கம்சனை கொன்று மதுராவை மீட்டவன்
சந்தீபனியை ஆசானாக ஏற்று அறுபத்து நான்கு கலைகளையும் கற்றவன்
துவாரகையை அழகாக நிர்மாணித்தவன்
ருக்மிணியை கடத்தி சென்று திருமணம் செய்தவன்
பதினாராயிரத்து எட்டு மனைவிகளை திறம்பட காத்தவன்
மகாபாரத போரின் மிக முக்கிய நாயகன்
அர்ச்சுனனுக்கு கீதோபதேசம் செய்த ஆசானவன்
தன் யாதவக் குலத்தை அவர்களின் செருக்கை கொண்டே அழித்தவன்
தன் நண்பனும் சகோதரருமான உத்தவனுக்கு உயிர்விடும் தருணத்தில் ஆத்ம ஞானத்தை உரைத்தவன்
இறுதியில் வேடனொருவனின் அம்பினாலே உடலோடு ஆத்ம ஜோதியிலே கலந்தவன்
அவன் வாழ்வில் சுகம் என்று எதுவும் கண்டவனில்லை
அவனைப் போல் சோதனைகள் சந்தித்தவரில்லை
வாழ்வின் இரகசியத்தை அவனை விட யாரும் கற்பிக்கவில்லை
புன்னகையை மட்டும் என்றும் அவன் விட்டவனில்லை
அவன் புன்னகையில் மயங்கிய காதலிகளும் அவனுடன் சேர்ந்து இருந்ததில்லை
இருப்பினும் அவனை என்றும் அவர்கள் கைவிட்டதில்லை
கண்ணா! கேட்கிறாயோ என் குரலையும்
ஆட்கொண்டு அருள்புரிவாயோ அனைவரையும்
-- அன்பே சிவம் - பத்மஜா
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=30
முக்கிய கதாபாத்திரங்களைப் பற்றி மனதில் அலசிய போது சிலர் என்னை எழுத தூண்டினர். அந்த எண்ணங்களின் வெளிபாடே இந்த முயற்சி.
பீஷ்மர்
தந்தையின் ஆசைக்காக தூது சென்றவர்
அரியணை தேவையில்லை என்று உதறித் தள்ளியவர்
திருமணம் வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்தவர்
ஹஸ்தினாபுரத்தை காப்பதே தன் கடமை என்றிருந்தவர்
கங்கையின் புத்திரன் என்ற சிறப்பு பெற்றவர்
பாகுபாடு தெரியாத வெள்ளை உள்ளம் கொண்டவர்
வீரத்திலே சிங்கத்தையும் மிஞ்சும் பெருமையுடையவர்
தேவவிரதன் என்ற இயற்பெயர் உடையவர்
பீஷ்மஎன்று தேவர்களாலும் புகழப் பெற்றவர்
இறப்பு அவர் விரும்பினாலன்றி தொட முடியாத வரம் பெற்றவர்
அம்பையின் காதல் தோல்வி காரணத்தால் சாபமும் பெற்றவர்
ஆதியில் இருந்து அந்தம் வரை மஹாபாரத கதையில் வாழ்ந்தவர்
கடமை உணர்ச்சியில் எடுத்துக் காட்டாக திகழ்ந்தவர்
கண்ண பரமாத்மாவால் மகான் என்று போற்றப்பட்டவர்
பாசப் பேரனான அர்ஜுனனால் அம்பு படுக்கையில் வீழ்ந்தவர்
பகவானை முன் நிறுத்தி அவன் துதி பாடியவர்
இறக்கும் தருவாயிலும் தருமனுக்கு உபதேசித்தவர்
அம்பு படுக்கையில் படுத்தும் கண்ணன் கருணையால் வலி தெரியாதவர்
உத்தராயணத்திற்காக காத்திருந்து இறுதி மூச்சை விட்ட உத்தம புருஷர்
துரோணர்
குச்சிகளை மந்திரத்தின் உதவிக் கொண்டு அடுக்கி பந்தை கிணற்றிலிருந்து எடுத்து பீஷ்மரை அசத்தியவர்
பீஷ்மரால் குரு வம்சத்தின் ஆசானாக நியமிக்கப்பட்டவர்
அஸ்வத்தாமன் என்ற அசகாய சூரனை ஈன்றெடுத்தவர்
திருதிராட்டினன் பாண்டு புத்திரர்களுக்கு குருவாய் பேதமின்றி கற்பித்தவர்
அர்ச்சுனன் பாலும் அவன் திறமையின் மேலும் தனி அன்பை வைத்திருந்தவர்
ஏகலைவன் என்ற இவரது சீடனின் கட்டைவிரலை குருதட்சணையாக கேட்டவர்
என்றும் தன் கடமையையே செய்து வந்த பிராமணர் இவர்
கண்ணனின் சூழ்ச்சியால் அனைத்தையும் விட்டுவிட்டு போர்க்களத்திலேயே உயிரை விட்டவர்
திருதிராட்டினன்
கண்ணின்றி அரசாண்டாலும் அகக்கண்ணையும் தொலைத்தவர்
வார்த்தையில் இனிமையும் மனதில் வன்மமும் பாண்டவர்களுக்காக வைத்திருந்தவர்
காந்தாரி என்ற உத்தமியை மனைவியாக கொண்டவர்
துரியோதனன் துச்சாதனன் என்று நூறு குழந்தைகளின் தந்தையிவர்
பிள்ளை பாசத்தால் பாஞ்சாலியின் மானபங்க நேரத்திலும் மௌனம் சாதித்தவர்
போர் அறிவிப்பின் போதிலும் பிள்ளை சொல் கேட்டு அதர்மத்தை சார்ந்து நின்றவர்
இத்தனை இருந்தும் ஞானக்கண் கொண்டு போரைக் காண வியாசரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்
அதை ஏற்க மனமின்றி சஞ்சயனுக்கு அகக்கண் கொடுக்க செய்து பாரத போரைப் பற்றி தெரிந்து கொண்டவர்
போரிலே அனைவரையும் இழந்து முடிவில் காட்டில் தவம் செய்து உயிரை விட்டவர்.
கண்ணன்
ரோஹிணி நட்சத்திரத்திலே பிறந்த அவதாரமவன்
கருநீல நிறத்தை பூண்டு சிறையில் பிறந்தவன்
தேவகி வசுதேவரை பெற்றோராய் ஏற்றவன்
இருப்பினும் வேறு தாய் தந்தையரை தேடி ஓடியவன்
பிருந்தாவனத்தில் கெஞ்சி கொஞ்சும் செல்லம் அவன்
யசோதையை அன்பினால் ஆட்டிப் படைத்தவன்
கோபியர்களை மயக்கி தன்வசம் இழக்கவைத்த அழகன்
ராதையின் காதலில் நனைந்து அடிபணிந்தவன்
தன் அட்டூழிய மாமன் கம்சனை கொன்று மதுராவை மீட்டவன்
சந்தீபனியை ஆசானாக ஏற்று அறுபத்து நான்கு கலைகளையும் கற்றவன்
துவாரகையை அழகாக நிர்மாணித்தவன்
ருக்மிணியை கடத்தி சென்று திருமணம் செய்தவன்
பதினாராயிரத்து எட்டு மனைவிகளை திறம்பட காத்தவன்
மகாபாரத போரின் மிக முக்கிய நாயகன்
அர்ச்சுனனுக்கு கீதோபதேசம் செய்த ஆசானவன்
தன் யாதவக் குலத்தை அவர்களின் செருக்கை கொண்டே அழித்தவன்
தன் நண்பனும் சகோதரருமான உத்தவனுக்கு உயிர்விடும் தருணத்தில் ஆத்ம ஞானத்தை உரைத்தவன்
இறுதியில் வேடனொருவனின் அம்பினாலே உடலோடு ஆத்ம ஜோதியிலே கலந்தவன்
அவன் வாழ்வில் சுகம் என்று எதுவும் கண்டவனில்லை
அவனைப் போல் சோதனைகள் சந்தித்தவரில்லை
வாழ்வின் இரகசியத்தை அவனை விட யாரும் கற்பிக்கவில்லை
புன்னகையை மட்டும் என்றும் அவன் விட்டவனில்லை
அவன் புன்னகையில் மயங்கிய காதலிகளும் அவனுடன் சேர்ந்து இருந்ததில்லை
இருப்பினும் அவனை என்றும் அவர்கள் கைவிட்டதில்லை
கண்ணா! கேட்கிறாயோ என் குரலையும்
ஆட்கொண்டு அருள்புரிவாயோ அனைவரையும்
-- அன்பே சிவம் - பத்மஜா
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=30
கீதை பத்மஜா- குரு வந்தனம்
ஜனார்த்தனா! அச்சுதா!
வேதத்தின் சாரமாய் திகழும் அவதார புருஷனே
உலகமெல்லாம் போற்றிக் கொண்டாடும் உன்னத ரூபனே
பல இலக்கியங்களின் தன்னிகரற்ற நாயகனே
ஓம்காரத்தின் இரகசியத்தை உரக்க உரைத்தவனே
உனக்கு என் பணிவார்ந்த வணக்கம்
தாமோதரா! மாதவா!
அனைத்து உலகமும் உன்னை தேடி அலைய
உன்னைத் தவிர வேறொன்றும் அறியாத பேதையவள்
உன் அன்னையின் அன்பிலே விரும்பி கட்டுண்டவனே
உண்மையை உன் வாயால் அவளுக்கு உணர்த்தியவனே
உனக்கு என் அன்பார்ந்த வணக்கம்
ராதாகிருஷ்ணா! முரளீதரா!
பசுவும் கன்றும் மரமும் பறவையும் தன்னை மறக்க
புல்லாங்குழல் ஊதி ஜகத்தை ஆட்கொண்டவனே
கோபியர்களின் ஆன்மீகக் காதலை தூண்டுவித்து ராச லீலை புரிந்தவனே
உன்னைப் போல் ஒரு காதலனை இவ்வுலகம் கண்டதில்லை
உனக்கு என் கண்ணீர் சார்ந்த வணக்கம்
கேசவா! யோகேஷ்வரா!
அர்ச்சுனனுக்கு நீ கொடுத்த உயர்ந்த இடம் அவனுக்கே தெரியுமோ
எனக்கு பொறாமை என்று ஒன்றிருந்தால் அது அவனை குறித்துதானோ
எத்தனை முறை படித்தாலும் என் மூளையில் எட்டாத உன் கீதையை
உன் திருவாயால் எனக்கு மொழிவாயாக
உனக்கு என் மரியாதை கலந்த வணக்கம்
கண்ணா! அனந்தா!
உன் உபதேசத்தை புரிந்துக் கொள்ளும் ஆற்றலை கொடு
அதை என் வாழ்க்கையில் பிரதிபலிக்க செய்யும் உறுதியை கொடு
மற்றவரின் வெறுப்பையும் இகழ்ச்சியையும் படிக்கட்டுகளாக்கி கொடு
கற்பூரத்தைப் போலவும்ஒரு வாழ்க்கையையும் கொடு
உனக்கு என் உள்ளார்ந்த வணக்கம
என் வந்தனம் உனக்கும்
உன் அறிய படைப்பிற்கும்
அதை எழுதிய வேத வியாசருக்கும்
ஏற்றுக் கொள்வாயோ என்னையும்
-- அன்பே சிவம் - பத்மஜா
வேதத்தின் சாரமாய் திகழும் அவதார புருஷனே
உலகமெல்லாம் போற்றிக் கொண்டாடும் உன்னத ரூபனே
பல இலக்கியங்களின் தன்னிகரற்ற நாயகனே
ஓம்காரத்தின் இரகசியத்தை உரக்க உரைத்தவனே
உனக்கு என் பணிவார்ந்த வணக்கம்
தாமோதரா! மாதவா!
அனைத்து உலகமும் உன்னை தேடி அலைய
உன்னைத் தவிர வேறொன்றும் அறியாத பேதையவள்
உன் அன்னையின் அன்பிலே விரும்பி கட்டுண்டவனே
உண்மையை உன் வாயால் அவளுக்கு உணர்த்தியவனே
உனக்கு என் அன்பார்ந்த வணக்கம்
ராதாகிருஷ்ணா! முரளீதரா!
பசுவும் கன்றும் மரமும் பறவையும் தன்னை மறக்க
புல்லாங்குழல் ஊதி ஜகத்தை ஆட்கொண்டவனே
கோபியர்களின் ஆன்மீகக் காதலை தூண்டுவித்து ராச லீலை புரிந்தவனே
உன்னைப் போல் ஒரு காதலனை இவ்வுலகம் கண்டதில்லை
உனக்கு என் கண்ணீர் சார்ந்த வணக்கம்
கேசவா! யோகேஷ்வரா!
அர்ச்சுனனுக்கு நீ கொடுத்த உயர்ந்த இடம் அவனுக்கே தெரியுமோ
எனக்கு பொறாமை என்று ஒன்றிருந்தால் அது அவனை குறித்துதானோ
எத்தனை முறை படித்தாலும் என் மூளையில் எட்டாத உன் கீதையை
உன் திருவாயால் எனக்கு மொழிவாயாக
உனக்கு என் மரியாதை கலந்த வணக்கம்
கண்ணா! அனந்தா!
உன் உபதேசத்தை புரிந்துக் கொள்ளும் ஆற்றலை கொடு
அதை என் வாழ்க்கையில் பிரதிபலிக்க செய்யும் உறுதியை கொடு
மற்றவரின் வெறுப்பையும் இகழ்ச்சியையும் படிக்கட்டுகளாக்கி கொடு
கற்பூரத்தைப் போலவும்ஒரு வாழ்க்கையையும் கொடு
உனக்கு என் உள்ளார்ந்த வணக்கம
என் வந்தனம் உனக்கும்
உன் அறிய படைப்பிற்கும்
அதை எழுதிய வேத வியாசருக்கும்
ஏற்றுக் கொள்வாயோ என்னையும்
-- அன்பே சிவம் - பத்மஜா
கீதை பத்மஜா- முன்னுரை
கீதையை பற்றிய பதிவுகள் அனைத்தும், திருமதி.பத்மஜா அவர்களால் எழுதப் பட்டது.
நான் படித்ததில் பிடித்ததாய் இங்கு குறித்து வைத்துள்ளேன்...
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=18617&st=0&sk=t&sd=a
கண்ணனின் உபதேசம் உலகின் உன்னத கீதம் அல்லவோ
அதை எளிய நடையில் எழுத முயல தூண்டுவதும் என் கண்ணனல்லவோ
பலர் பல விதத்தில் பொருளாய்வு செய்த உண்மையல்லவோ
இருப்பினும் என்னை வேண்டுவது யாதவ குலத் திலகமல்லவோ
என் வெற்றியின் அகந்தையை அறவே அழிக்குமல்லவோ
தோல்வியை கண்டு துவளும் என்னை அரவணைக்குமல்லவோ
கண்ணீரை துடைக்கும் உன்னத கையாக மாறுமல்லவோ
சிரித்து வாழும் கலையைதான் உணர்த்துமல்லவோ
இம்முயற்சிக்கு பின்னே என் சுயநலமும் உண்டு
என் வாழ்க்கை முறையை மாற்றும் சக்தியும் இதற்கு உண்டு
சிந்திக்க சிந்திக்க பல உண்மைகள் புரிவதுண்டு
என்னுள் தாக்கத்தை உண்டு பண்ணும் ஆற்றலுமுண்டு
உறவுகளை அணைத்துக் கொள்ளும் நுணுக்கமும் உண்டு
இருப்பினும் தாமரை இலைபோல் வாழ இனி மார்க்கமும் உண்டு
உணர்வுகளை கையாளும் அழகும் வர வாய்ப்புண்டு
முடிவில் தூய்மையை மட்டுமே தாங்கி வாழும் காலம் வருவதுண்டு
இதில் வெற்றி கிட்டுமா என்று தெரியவில்லை
தொடர்ந்து முடியுமா என்று புரியவில்லை
புரிந்து எழுதுவேனா என்று சொல்வதற்கில்லை
புரியாமலே கதை கட்டுவேனா என்றும் தெரியவில்லை
கருத்து பொழிவு இருக்க வாய்ப்புமில்லை
உண்மையை வெளிக் கொணரும் ஆற்றலும் எனக்கில்லை
மொழி இலக்கணம் துளியும் கை வரவில்லை
இருப்பினும் என் வாழ்க்கை இலட்சியத்தை கைவிட மனமில்லை
என் தோழனும் குருவுமான கண்ணனை
நான் புரிந்துக் கொண்ட அறிந்து கொண்ட கிருஷ்ணனை
என் வார்த்தைகளால் முதலில் வந்தனம் கூறிவிட்டு
பிறகு கீதையின் சாரத்தை புரிந்துக் கொள்ள முயலப் போகிறேன்
அதன் அருமையையும் அறிந்து வாழக் கற்றுக் கொள்ள போகிறேன்
இதோ என் மூளையை வரும் மாதங்களிலோ வருடங்களிலோ
செதுக்க போகிறேன் தீவிரமாக ஆனால் மிக மெதுவாக
அழகிய உருக்கொண்டு என் படைப்பு மாற
என் கண்ணனை பிடிக்க செல்கிறேன் முதலில்
விருப்பமிருந்தால் வாருங்கள் என்னுடன்
அன்பே சிவம் -பத்மஜா
நான் படித்ததில் பிடித்ததாய் இங்கு குறித்து வைத்துள்ளேன்...
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=18617&st=0&sk=t&sd=a
கண்ணனின் உபதேசம் உலகின் உன்னத கீதம் அல்லவோ
அதை எளிய நடையில் எழுத முயல தூண்டுவதும் என் கண்ணனல்லவோ
பலர் பல விதத்தில் பொருளாய்வு செய்த உண்மையல்லவோ
இருப்பினும் என்னை வேண்டுவது யாதவ குலத் திலகமல்லவோ
என் வெற்றியின் அகந்தையை அறவே அழிக்குமல்லவோ
தோல்வியை கண்டு துவளும் என்னை அரவணைக்குமல்லவோ
கண்ணீரை துடைக்கும் உன்னத கையாக மாறுமல்லவோ
சிரித்து வாழும் கலையைதான் உணர்த்துமல்லவோ
இம்முயற்சிக்கு பின்னே என் சுயநலமும் உண்டு
என் வாழ்க்கை முறையை மாற்றும் சக்தியும் இதற்கு உண்டு
சிந்திக்க சிந்திக்க பல உண்மைகள் புரிவதுண்டு
என்னுள் தாக்கத்தை உண்டு பண்ணும் ஆற்றலுமுண்டு
உறவுகளை அணைத்துக் கொள்ளும் நுணுக்கமும் உண்டு
இருப்பினும் தாமரை இலைபோல் வாழ இனி மார்க்கமும் உண்டு
உணர்வுகளை கையாளும் அழகும் வர வாய்ப்புண்டு
முடிவில் தூய்மையை மட்டுமே தாங்கி வாழும் காலம் வருவதுண்டு
இதில் வெற்றி கிட்டுமா என்று தெரியவில்லை
தொடர்ந்து முடியுமா என்று புரியவில்லை
புரிந்து எழுதுவேனா என்று சொல்வதற்கில்லை
புரியாமலே கதை கட்டுவேனா என்றும் தெரியவில்லை
கருத்து பொழிவு இருக்க வாய்ப்புமில்லை
உண்மையை வெளிக் கொணரும் ஆற்றலும் எனக்கில்லை
மொழி இலக்கணம் துளியும் கை வரவில்லை
இருப்பினும் என் வாழ்க்கை இலட்சியத்தை கைவிட மனமில்லை
என் தோழனும் குருவுமான கண்ணனை
நான் புரிந்துக் கொண்ட அறிந்து கொண்ட கிருஷ்ணனை
என் வார்த்தைகளால் முதலில் வந்தனம் கூறிவிட்டு
பிறகு கீதையின் சாரத்தை புரிந்துக் கொள்ள முயலப் போகிறேன்
அதன் அருமையையும் அறிந்து வாழக் கற்றுக் கொள்ள போகிறேன்
இதோ என் மூளையை வரும் மாதங்களிலோ வருடங்களிலோ
செதுக்க போகிறேன் தீவிரமாக ஆனால் மிக மெதுவாக
அழகிய உருக்கொண்டு என் படைப்பு மாற
என் கண்ணனை பிடிக்க செல்கிறேன் முதலில்
விருப்பமிருந்தால் வாருங்கள் என்னுடன்
அன்பே சிவம் -பத்மஜா
மரப் பிரபோ... ஞானம்
அதிகமாக சம்ஸ்கிருத ஞானமில்லாத ஒருத்தர், ரொம்பவும் பக்தியோடு
தினமும் 108 தடவை சொல்லி வந்தார்.
"பத்மநாபோ, மரப் பிரபு"
'பத்மநாபோ அமரப் பிரபு;' என்று பதம் பிரித்துச் சொல்றதுதான் சரி. அமரர்களின் (தேவர்களின்) பிரபுவே-அரசனே என்று அர்த்தம்.
ஆனால் 'மரப் பிரபோ' என தப்பாகப் பதம் பிரித்தவர் மரங்களுக்கு அரசனே என்று அர்த்தம் பண்ணிக் கொண்டார். தினமும் ஒரு மரத்தை
' பதமநாபோ மரப்பிரபோ' என்று கூறி 108 தடவை பிரதட்சணம் பண்ணினார்.
அந்த வழியே போன சம்ஸ்கிருத பண்டிதர் இதைப் பார்த்து நடுங்கிப் போயிட்டார். தவறாக உச்சரித்தவரை நிறுத்தி, திருத்தினார். உங்கள் வாக்கு சரியில்லை. ' பதமநாபோ அமரப் பிரபோ' என சொல்ல வேண்டும் என்று கூறி அர்த்தத்தையும் விளக்கினார்.
தவறாக கூறியவர் பண்டிதரிடம் "அடாடா! தெரியாமல் சொல்லி விட்டேனே... எனக்குப் பாவம் சம்பவிக்குமா?" எனக் கேட்டார் கவலையுடன். அதெல்லாம் வராதுப்பா என கூறிவிட்டுச் சென்று விட்டார்.
மறுநாளிலிருந்து திருத்தி உச்சரிக்க ஆரம்பித்தார் முதலாமவர். மரத்தைச் சுற்றுவதை நிறுத்திவிட்டு, திண்ணையில் அமர்ந்து 'பதமநாபோ அமரப் பிரபோ' என்று கூறி வந்தார்.
அன்று இரவு திருத்திய பண்டிதரின் கனவில் பகவான் வந்தார்.
"உம்மை யார் அந்த பக்தரைத் திருத்தச் சொன்னார்? நீர் திருத்திய பிறகு அவர் மரத்தைச் சுற்றுவதை நிறுத்திவிட்டார்... அப்படியானால் நான் மரங்களுக்குப் பிரபு இல்லையா? என்று வினவினார். நீர் திருத்தச் சொன்னதால் 108 பிரதட்சணம் செய்வதை அவர் நிறுத்தினார்.
திரும்பவும் போய் அவரிடத்தில் சொல்லு..." - ' மரப் பிரபு ' என்றே சொல்லச் சொல்லு...." என்று கோபித்துக் கொண்டார்.
குழந்தை சரியாக உச்சரிக்காவிட்டாலும் மகிழ்ச்சியோடு நாம் கேட்கவில்லையா....? அதுபோலத்தான் எல்லையற்ற கருணையுடைய
பகவானும் நம்மைக் குழந்தையாகப் பாவித்துக் கேட்கிறான்.
நன்றி -- மூலம் -->http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=18617&st=0&sk=t&sd=a&start=15
தினமும் 108 தடவை சொல்லி வந்தார்.
"பத்மநாபோ, மரப் பிரபு"
'பத்மநாபோ அமரப் பிரபு;' என்று பதம் பிரித்துச் சொல்றதுதான் சரி. அமரர்களின் (தேவர்களின்) பிரபுவே-அரசனே என்று அர்த்தம்.
ஆனால் 'மரப் பிரபோ' என தப்பாகப் பதம் பிரித்தவர் மரங்களுக்கு அரசனே என்று அர்த்தம் பண்ணிக் கொண்டார். தினமும் ஒரு மரத்தை
' பதமநாபோ மரப்பிரபோ' என்று கூறி 108 தடவை பிரதட்சணம் பண்ணினார்.
அந்த வழியே போன சம்ஸ்கிருத பண்டிதர் இதைப் பார்த்து நடுங்கிப் போயிட்டார். தவறாக உச்சரித்தவரை நிறுத்தி, திருத்தினார். உங்கள் வாக்கு சரியில்லை. ' பதமநாபோ அமரப் பிரபோ' என சொல்ல வேண்டும் என்று கூறி அர்த்தத்தையும் விளக்கினார்.
தவறாக கூறியவர் பண்டிதரிடம் "அடாடா! தெரியாமல் சொல்லி விட்டேனே... எனக்குப் பாவம் சம்பவிக்குமா?" எனக் கேட்டார் கவலையுடன். அதெல்லாம் வராதுப்பா என கூறிவிட்டுச் சென்று விட்டார்.
மறுநாளிலிருந்து திருத்தி உச்சரிக்க ஆரம்பித்தார் முதலாமவர். மரத்தைச் சுற்றுவதை நிறுத்திவிட்டு, திண்ணையில் அமர்ந்து 'பதமநாபோ அமரப் பிரபோ' என்று கூறி வந்தார்.
அன்று இரவு திருத்திய பண்டிதரின் கனவில் பகவான் வந்தார்.
"உம்மை யார் அந்த பக்தரைத் திருத்தச் சொன்னார்? நீர் திருத்திய பிறகு அவர் மரத்தைச் சுற்றுவதை நிறுத்திவிட்டார்... அப்படியானால் நான் மரங்களுக்குப் பிரபு இல்லையா? என்று வினவினார். நீர் திருத்தச் சொன்னதால் 108 பிரதட்சணம் செய்வதை அவர் நிறுத்தினார்.
திரும்பவும் போய் அவரிடத்தில் சொல்லு..." - ' மரப் பிரபு ' என்றே சொல்லச் சொல்லு...." என்று கோபித்துக் கொண்டார்.
குழந்தை சரியாக உச்சரிக்காவிட்டாலும் மகிழ்ச்சியோடு நாம் கேட்கவில்லையா....? அதுபோலத்தான் எல்லையற்ற கருணையுடைய
பகவானும் நம்மைக் குழந்தையாகப் பாவித்துக் கேட்கிறான்.
நன்றி -- மூலம் -->http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=18617&st=0&sk=t&sd=a&start=15
அனுமனது அறிவு...
ராமனும், லட்சுமணனும் ஆஞ்சனேயனை அணுகினர். அன்னவன் அவர்களைக் கூர்ந்து நோக்கினான்.
" முரண்பாடே வடிவெடுத்துள்ள நீங்கள் யார் ? என்ன நோக்கத்துடன் இங்கே வந்திருக்கிறீகள் ? " என்று அவன் அவர்களை விரட்டுகிற பாங்கில் வினவினான்.
லட்சுமணன் : எங்களிடத்து நீ காணும் முரன்பாடு யாது ?
அனுமான் : பார்த்தால் தேவர்கள் போன்று தென்படுகிறீர்கள். ஆனால் உங்களுடைய பாதங்கள் பூமியில் படிகின்றன. தவசிகள் கோலம் பூண்டிருக்கிறீர்கள். ஆனால் கொடிய ஆயுதங்கள் உடைத்திருக்கிறீர்கள். ஞானிகள் போன்று தென்படுகிறீர்கள். ஆனால் விசனத்தில் மூழ்கியிருக்கிறீர்கள். ஞானியர்களுக்குத் தேடுதலும் தவிர்த்தலும் இல்லை. ஆனால் நீங்களோ இழந்துவிட்ட எதையோ தேடுபவர்கள் போன்று தென்படுகிறீர்கள் இவைகள் தாம் நான் உங்களிடம் கண்ட முரண்பாடு.
ராமன் : லட்சுமணா, இவன் கற்றவன். இவனோடு நட்புப் பூணுவது நமக்கு நலன் விளைவிக்கும். நம்மை இவனுக்கு அறிமுகப்படுத்து.
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=18617&st=0&sk=t&sd=a
" முரண்பாடே வடிவெடுத்துள்ள நீங்கள் யார் ? என்ன நோக்கத்துடன் இங்கே வந்திருக்கிறீகள் ? " என்று அவன் அவர்களை விரட்டுகிற பாங்கில் வினவினான்.
லட்சுமணன் : எங்களிடத்து நீ காணும் முரன்பாடு யாது ?
அனுமான் : பார்த்தால் தேவர்கள் போன்று தென்படுகிறீர்கள். ஆனால் உங்களுடைய பாதங்கள் பூமியில் படிகின்றன. தவசிகள் கோலம் பூண்டிருக்கிறீர்கள். ஆனால் கொடிய ஆயுதங்கள் உடைத்திருக்கிறீர்கள். ஞானிகள் போன்று தென்படுகிறீர்கள். ஆனால் விசனத்தில் மூழ்கியிருக்கிறீர்கள். ஞானியர்களுக்குத் தேடுதலும் தவிர்த்தலும் இல்லை. ஆனால் நீங்களோ இழந்துவிட்ட எதையோ தேடுபவர்கள் போன்று தென்படுகிறீர்கள் இவைகள் தாம் நான் உங்களிடம் கண்ட முரண்பாடு.
ராமன் : லட்சுமணா, இவன் கற்றவன். இவனோடு நட்புப் பூணுவது நமக்கு நலன் விளைவிக்கும். நம்மை இவனுக்கு அறிமுகப்படுத்து.
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=18617&st=0&sk=t&sd=a
ரமணர் மகரிஷின் ஆன்மீக சொற்பொழிவில்...
ராமரும், லட்சுமணனும், சீதையும் தண்டகவனத்தில் ஒரு ஆசிரமத்திலிருந்து இன்னொரு ஆசிரமத்திற்கு சென்ற வரலாறு கூறப்படுகிறது. இவர்கள் ஒரு ஆசிரமத்திலிருந்து இன்னொரு ஆசிரமத்திற்குப் போகும்போது ராம,லட்சுமண வயதை ஒத்த ரிஷி குமாரர்களும் சேர்ந்து அவர்களுடன் இரண்டாவது ஆசிரமத்திற்குப் புறப்பட்டார்கள்.
பின்னர் இரண்டாவது ஆசிரமத்திலிருந்து மூன்றாவது ஆசிரமத்திற்கு செல்லும்போதும் அங்குள்ள சில ரிஷி குமாரர்களில் ராம,லட்சுமண வயதை ஒத்த சில ரிஷி குமாரர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.
மூன்றாவது ஆசிரமத்திலுள்ள பெண்கள் ராமன்,லட்சுமணன்,சீதா தேவி ஆகியோருடன், முதல் மற்றும் இரண்டாவது ஆசிரமத்து இளைஞர்களையும் ஒருசேரக் கண்டனர். அப்புதியோர் கூட்டத்தில் சீதை மட்டும் பெண் என்பதால் அவர்கள் சிதையை அடையாளம் கண்டு கொண்டனர். மற்றவர்களில் யார் ராமர், லட்சுமணர் என்பது அப்பெண்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் சீதையிடம் ஒவ்வொரு இளைஞனாகக் காட்டி இவர் ராமரா? இவர் ராமரா? என்று கேட்டனர். ஒவ்வொருவரையும் சுட்டும்போது சீதையும் இவர் ராமர் இல்லை, இவர் ராமர் இல்லை என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.
லட்சுமணன் பக்கம் வந்த போது இவர் ராமர் இல்லை என்றாள்.
இறுதியில் ரிஷிபத்தினிகள் ராமரைச் சுட்டிக் காட்டி இவர் ராமரா? என்று கேட்டார்கள். சீதை நாணத்தால் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.
இவர்தான் ராமர் என்று கூறவில்லை.ஏனெனில்,
உலகில் பரம்பொருளைத் தவிர மற்றவற்றைக் காணும்போது இது பரம்பொருள் அல்ல என்று சாதகன், தெய்வபக்தன் கூறுவான். பரம்பொருளைக் காணும்போது உடன்பாட்டுக் குணங்களால் வருணிக்க முடியாது என்பதால் இது பரம்பொருள் என்று கூறமாட்டான்.
இதுவே நேதி, நேதி என்னும் தத்துவமாகும். பரம்பொருளைக் கணடதும் பேச்சு நின்றுவிடும். அத்தகைய உயர்நிலையை அடைந்தவர்கள் மௌனி என்றும் முனிவர்கள் என்றும் சொல்லப்படுவர்.
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=18617&st=0&sk=t&sd=a
பின்னர் இரண்டாவது ஆசிரமத்திலிருந்து மூன்றாவது ஆசிரமத்திற்கு செல்லும்போதும் அங்குள்ள சில ரிஷி குமாரர்களில் ராம,லட்சுமண வயதை ஒத்த சில ரிஷி குமாரர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.
மூன்றாவது ஆசிரமத்திலுள்ள பெண்கள் ராமன்,லட்சுமணன்,சீதா தேவி ஆகியோருடன், முதல் மற்றும் இரண்டாவது ஆசிரமத்து இளைஞர்களையும் ஒருசேரக் கண்டனர். அப்புதியோர் கூட்டத்தில் சீதை மட்டும் பெண் என்பதால் அவர்கள் சிதையை அடையாளம் கண்டு கொண்டனர். மற்றவர்களில் யார் ராமர், லட்சுமணர் என்பது அப்பெண்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் சீதையிடம் ஒவ்வொரு இளைஞனாகக் காட்டி இவர் ராமரா? இவர் ராமரா? என்று கேட்டனர். ஒவ்வொருவரையும் சுட்டும்போது சீதையும் இவர் ராமர் இல்லை, இவர் ராமர் இல்லை என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.
லட்சுமணன் பக்கம் வந்த போது இவர் ராமர் இல்லை என்றாள்.
இறுதியில் ரிஷிபத்தினிகள் ராமரைச் சுட்டிக் காட்டி இவர் ராமரா? என்று கேட்டார்கள். சீதை நாணத்தால் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.
இவர்தான் ராமர் என்று கூறவில்லை.ஏனெனில்,
உலகில் பரம்பொருளைத் தவிர மற்றவற்றைக் காணும்போது இது பரம்பொருள் அல்ல என்று சாதகன், தெய்வபக்தன் கூறுவான். பரம்பொருளைக் காணும்போது உடன்பாட்டுக் குணங்களால் வருணிக்க முடியாது என்பதால் இது பரம்பொருள் என்று கூறமாட்டான்.
இதுவே நேதி, நேதி என்னும் தத்துவமாகும். பரம்பொருளைக் கணடதும் பேச்சு நின்றுவிடும். அத்தகைய உயர்நிலையை அடைந்தவர்கள் மௌனி என்றும் முனிவர்கள் என்றும் சொல்லப்படுவர்.
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=18617&st=0&sk=t&sd=a
Subscribe to:
Posts (Atom)